இன்றும் (12) நாளையும் (13) மதுக்கடைகளை மூடுவது தொடர்பான அறிவிப்பு.

ஏப்ரல் 13 ஆம் திகதி புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஏப்ரல் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் விசேட அனுமதி பெற்ற இடங்கள் தவிர, கலால் உரிமம் பெற்ற ஏனைய அனைத்து சில்லறை விற்பனைக்கான மதுபானக் கடைகளையும் மூட வேண்டும் என்று கலால் ஆணையர் நாயகம் உத்தரவிட்டுள்ளார்.

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் உரிமம் பெற்ற மூன்று நட்சத்திர வகுப்பிற்கு மேல் உள்ள ஹோட்டல்களில் தங்கி இருக்கும் சுற்றுலா பயணிகளுக்கு மற்றும் விசேட அனுமதி பெற்ற இடங்களுக்கு இது பொருந்தாது.

அத்துடன், 23.04.2024 அன்று வருகின்ற போயா தினத்தன்று, உரிமம் வகைப்படுத்தப்படாமல் நாடு முழுவதும் உள்ள கலால் உரிமம் பெற்ற மதுபானம் விற்பனை செய்கின்ற அனைத்து  இடங்களையும் மூடுமாறு கலால் ஆணையாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார்.

இக்காலப்பகுதியில் இடம்பெறும் மது, போதைப்பொருள் மற்றும் புகையிலை குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளை கலால் திணைக்களத்தின் செயற்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ள 1913 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது நாடளாவிய ரீதியில் உள்ள கலால் நிலையங்கள் மற்றும் விசேட பிரிவுகளுக்கு தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.