`ஔரங்கசீப்பின் சிந்தனைப் பள்ளியில் பயின்றவர்கள்…' – ராகுல், ஒவைசியைச் சாடும் அனுராக் தாக்கூர்!

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, “ஹைதராபாத்தில் ஓவைசிக்கு எதிராக ராகுல் காந்தி வேட்பாளரை நிறுத்தியிருக்கிறார். ஆனால் இருவரின் சிந்தனையும் ஒன்றுதான். இதில் யார் யாருக்கு பி டீம் எனத் தெரியவில்லை.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி அமேதியில் ஸ்மிருதி இரானி என்ற ஒரு பெண்ணால் தோற்கடிக்கப்பட்டதுபோல், ஹைதராபாத்தில் மாதவி லதா என்ற எங்கள் பெண் வேட்பாளரால் ஒவைசி தோற்கடிக்கப்படுவார். கர்நாடகாவில் லவ் ஜிஹாத் காரணமாக கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான சிபிஐ விசாரணைக்கு தங்கள் கட்சி கவுன்சிலர் கோரிக்கை வைக்கிறார்.

ஆனால், அந்த கோரிக்கை குறித்து ராகுல் காந்தியும் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் அமைதியாக இருக்கிறார்கள். லவ் ஜிஹாத் என்ற பெயரில் இன்னும் எத்தனை மகள்கள் பலியாவார்கள்? நூற்றுக்கணக்கான இந்து மகள்கள் ஊடுருவல்காரர்களாலும், குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களாலும் கொல்லப்படுகின்றனர்.

அசாதுதீன் ஒவைசி

அவர்கள் மீது உங்களுக்கு ஏன் அனுதாபம்? காங்கிரஸ் தலைவர்கள் வாக்கு வங்கி அரசியல் செய்கிறார்கள். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் அசாதுதீன் ஒவைசியும் ஜனநாயகத்தை உதட்டில் வைத்து, ஷரியாவை இதயத்திலும் மனதிலும் கொண்டு அவுரங்கசீப் சிந்தனைப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.