ஏக்நாத் தலைமையில் 2024ல் பேரவை தேர்தல்; துரோகம் செய்ததால் உத்தவ் தாக்கரேவை பழிவாங்கினோம்!: பாஜக துணை முதல்வர் பட்னாவிஸ் தடாலடி

மும்பை: எங்களுக்கு துரோகம் செய்ததால் உத்தவ் தாக்கரேவை பழிவாங்கினோம் என்று மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்த நிலையில், சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பாஜக கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘உத்தவ் தாக்கரே … Read more

1037-வது சதய விழாவில் நினைவுகூர்ந்து ராஜராஜசோழன் படத்தை முதுகில் டாட்டூவாக வரைந்த சேலம் வாலிபர்; வரலாற்று சாதனையை மறைக்க முடியாது என நெகிழ்ச்சி

சேலம்: சேலத்தில் தஞ்சை பெரிய கோயில் மற்றும் ராஜராஜ சோழனின் படத்தை, சேலம் வாலிபர் முதுகில் டாட்டூவாக வரைந்துள்ளார். அவரது 1037வது சதய விழாவில் வரலாற்று சாதனையை மறைக்க முடியாது என நெகிழ்ச்சியுடன் கூறினார். சோழ தேசத்தை ஆண்ட மாமன்னன் ராஜராஜசோழன், காலத்தால் அழிக்க முடியாத அளவிற்கு தஞ்சை பெருவுடையார் கோயிலை கட்டி வைத்துள்ளார். அவரது நினைவை பறைசாற்றும் வகையில், ஆயிரம் ஆண்டுகளை கடந்தும், அக்கோயில் கம்பீரமாக நிற்கிறது. இதனை பார்த்து வரலாற்று அறிஞர்களும், வெளிநாட்டினரும் இன்றைக்கும் … Read more

டி20 உலகக் கோப்பை: 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அணி வெற்றி

மெல்போர்ன்: டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 61*, கே.எல்.ராகுல் 51 ரன்கள் எடுத்தனர்.

சிலைக் கடத்தல் வழக்கு விசாரணையில் முறைகேடு; பொன்.மாணிக்கவேல் மீது சிபிஐ வழக்கு; மாஜி ஐஜி: சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு மத்தியில் பரபரப்பு

புதுடெல்லி: சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்த பொன்.மாணிக்கவேல் மீது இன்று சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு விசாரணையில் உள்ள நிலையில் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சர்வதேச கடத்தல் கும்பலோடு கூட்டு சேர்ந்து பல கோடி மதிப்புள்ள சாமி சிலைகளை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள திருவள்ளூர் மாவட்ட டி.எஸ்.பி-யாக இருந்த காதர் பாஷா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனிடையே காதர் பாஷா சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த … Read more

சென்னையில் இருந்து புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் கழன்றது: டிரைவரின் சாமர்த்தியதால் பயணிகள் தப்பினர்

திருவள்ளூர்: சென்னையில் இருந்து கோவைக்கு புறப்பட்ட சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலின் இரு பெட்டிகளின் இணைப்பு துண்டானது. ஆனால் டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரிய உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றிரவு புறப்பட்டது. இதில் ஏராளமான பயணிகள் இருந்தனர். இந்த ரயில், திருவள்ளூர் அருகே நள்ளிரவு 11 மணி அளவில் வந்தபோது எஸ் 7, எஸ் 8 ஆகிய 2 பெட்டிகளில் பயங்கர சத்தம் ஏற்பட்டதால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் கூச்சலிட்டனர். … Read more

கடலூரில் ஆர்.எஸ்.எஸ். பேரணி தொடங்கியது: 1000-ம் போலீசார் பாதுகாப்பு

கடலூர்: கடலூரில் ஆர்.எஸ்.எஸ். பேரணி தொடங்கி நடைபெற்று வருகிறது. 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ் பேரணி தேரடி தெரு, சுப்பராய செட்டி தெரு, பெருமாள் கோயில் தெரு, போடி செட்டி தெரு வழியாக செல்கிறது. திருப்பாதிரிப்புலியூர் சன்னதி தெரு தனியார் மண்டபம் அருகே தொடங்கிய ஆர்.எஸ்.எஸ். பேரணி பொதுக்கூட்ட திடலில் முடிகிறது.

நிறைமாத கர்ப்பிணியான நடிகை அலியா பட் மருத்துவமனையில் அனுமதி

மும்பை: நிறைமாத கர்ப்பிணியான நடிகை அலியா பட், இன்று காலை மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாலிவுட் நடிகை அலியா பட், கடந்த ஏப்ரல் மாதம் நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த ஜூன் மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாக அலியா பட் தெரிவித்தார். நிறைமாத கர்ப்பணியான அலியா பட், இன்று காலை 7.30 மணியளவில் மும்பையில் உள்ள எச்என் ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அலியா பட்டின் தந்தை மகேஷ் பட் … Read more

காமெடியை விட்டு வெளியே வரமாட்டேன்: நடிகர் யோகிபாபு பேட்டி

திருச்செந்தூர்: அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடிகர் யோகிபாபு மற்றும் படக் குழுவினர் சுவாமி தரிசனம் செய்தனர். நகைச்சுவை நடிகராக திரையுலகில் அறிமுகமான நடிகர் யோகிபாபு, தற்போது படங்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இயக்குநர் சிம்பு தேவன் இயக்கத்தில் உவரியில் நடைபெறும் ‘போட்’ எனும் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு உவரியில் நடந்து வருகிறது. இதில் சின்னிஜெயந்தும் நடித்து வருகிறார். நேற்றிரவு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் … Read more

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தலைமைச் செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு

சென்னை: சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தலைமைச் செயலாளர் இறையன்பு நேரில் சென்று ஆய்வு செய்தார். மீண்டும் மழை தொடங்குவதற்கு முன்பு முன்னெச்சரிக்கை பணிகளை விரைந்து முடித்திட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

நீட் தேர்வில் வென்ற மாணவி: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ நிதிஉதவி வழங்கி வாழ்த்து

ஊத்துக்கோட்டை: திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், பேரிட்டிவாக்கம் ஊராட்சியை சேர்ந்த முனிரத்தினம் – சுஜாதா தம்பதியின் மகள் லாவண்யா. இவர் போந்தவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2  படித்தார். இவர் நடந்து முடிந்தநீட் தேர்வில் வெற்றி பெற்று கிருஷ்ணகிரி மருத்துவ கல்லூரியில் பயில அனுமதி கிடைத்துள்ளது. இந்த நிலையில், கும்மிடிப்பூண்டி தொகுதி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், பேரிட்டிவாக்கம் கிராமத்துக்கு சென்று மாணவிக்கு வாழ்த்து தெரிவித்து ரூ. 25 ஆயிரம் ரூபாய் தனது சொந்த பணத்தில் காசோலையாக வழங்கினார். ஒவ்வொரு … Read more