நிறைமாத கர்ப்பிணியான நடிகை அலியா பட் மருத்துவமனையில் அனுமதி

மும்பை: நிறைமாத கர்ப்பிணியான நடிகை அலியா பட், இன்று காலை மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாலிவுட் நடிகை அலியா பட், கடந்த ஏப்ரல் மாதம் நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த ஜூன் மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாக அலியா பட் தெரிவித்தார். நிறைமாத கர்ப்பணியான அலியா பட், இன்று காலை 7.30 மணியளவில் மும்பையில் உள்ள எச்என் ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து அலியா பட்டின் தந்தை மகேஷ் பட் கூறுகையில், ‘எனது முதல் பேரக்குழந்தையை வரவேற்க தயாராக உள்ளேன்’ என்று கூறினார். அடுத்த 48 மணி நேரத்திற்குள் அலியா பட், தனது குழந்தையை பெற்றெடுப்பார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. அலியா பட் தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், அவரது கணவர் ரன்பீர் கபூர் அவரது அருகில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.