வெளிநாடுகளில் தொற்று அதிகரிப்பதால் முன்னெச்சரிக்கை சளி, காய்ச்சல் இருந்தால் பரிசோதனை: மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவு
புதுடெல்லி: சளி, காய்ச்சல் மற்றும் சுவாச தொற்றினால் பாதிக்கப்படுவோரை கண்காணிக்கும் நடவடிக்கையை மீண்டும் தொடங்குமாறு ஒன்றிய அரசு வலியுறுத்தி உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. புதிதாக தொற்றினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததை தொடர்ந்து, தீவிர கொரோனா பரிசோதனைகள் சமீபத்தில் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் தென்கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஒன்றிய … Read more