அமிதாப்பச்சன் நடிக்கும் தமிழ் படம் : மீண்டும் தொடங்குகிறது

கடந்த 3 வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் ஒரு ஆச்சர்யம் நிகழ்ந்தது. பாலிவுட்டின் பிரபல ஸ்டார் அமிதாப்பச்சன் நேரடி தமிழ் படம் ஒன்றில் நடிக்கிறார் என்பதுதான் அது. அந்த படத்தில் அமிதாப் தந்தையாகவும், எஸ்.ஜே.சூர்யா அவரது மகனாக நடிக்கிறார் என்ற அறிவிப்புடன் இருவரும் இணைந்து நடிக்கும் படங்களும் வெளியானது. படத்தின் பெயர் உயர்ந்த மனிதன். இதே படத்தை இந்தியில் தி கிரேட் மேன் என்ற பெயரில் உருவாக்குவதாகவும் அறிவித்தனர். இதனை இயக்குனர் தமிழ்வாணன் இயக்குகிறார் என்றும் அறிவிக்கப்பட்டது. … Read more

கனடாவில் ஹிந்து கோவில்கள் சூறை| Dinamalar

டொரோன்டா-கனடாவில், ஹிந்து கோவில்கள் தொடர்ந்து சூறையாடப்பட்டு வருவதால் நாடு முழுதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. வட அமெரிக்க நாடான கனடாவின் பிராம்ப்டன் பகுதியில் கடந்த மாதம் ஆஞ்சநேயர் கோவிலை சில மர்ம நபர்கள் சூறையாடினர். அந்த சம்பவத்தை தொடர்ந்து அம்மன் கோவில், சிவன் கோவில், ஜெகன்நாதர் கோவில் என அடுத்தடுத்து பல கோவில்கள் சூறையாடப்பட்டன.கடந்த 30ம் தேதி மிசிசவுகா பகுதியில் உள்ள ஒரு ஹிந்து கலாசார மையத்திற்குள் நள்ளிரவில் இரண்டு மர்ம நபர்கள் அத்துமீறி நுழைந்தனர். … Read more

தெலுங்கில் பாடகியான அதிதி

இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி. டாக்டருக்கு படித்த இவர் தற்போது நடிப்பின் மீது கொண்ட காதலால் நடிகை ஆகிவிட்டார். விருமன் படத்தில் கார்த்திக் ஜோடியாக அறிமுகமாகி உள்ள அதிதி அடுத்தடுத்து 3 படங்களில் நடிக்க இருக்கிறார். விருமன் வெளியீட்டுக்கு பிறகு இந்த படங்கள் பற்றிய அறிவிப்புகள் வெளிவர இருக்கிறது. அதிதி முறைப்படி நடனமும், சங்கீதமும் படித்தவர். எதிர்காலத்தில் சிறந்த பாடகியாகும் திட்டத்திலும் இருக்கிறார். இந்த நிலையில் இசை அமைப்பாளர் தமன், அதிதியை பாடகியாக்கி இருக்கிறார். தமனை பாய்ஸ் … Read more

உக்ரைன் எல்லை பகுதியில் 70 சதவீத ரஷ்ய வீரர்கள்| Dinamalar

வாஷிங்டன்-உக்ரைன் எல்லைப் பகுதியில் 70 சதவீத ரஷ்ய ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்னை நிலவி வருகிறது. ‘நேட்டோ’ எனப்படும் வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டணியில் இணைய உக்ரைன் விரும்புகிறது.இதற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்தாலும், ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதை அடுத்து உக்ரைன் எல்லையில் ராணுவ வீரர்களை ரஷ்யா குவித்தது. … Read more

கூடுதல் பாதுகாப்பை ஓவைசி ஏற்க வேண்டும்: அமித்ஷா| Dinamalar

புதுடில்லி: ஐதராபாத் முஸ்லிம் அமைப்பின் எம்பி ஓவைசி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜ்யசபாவில் விளக்கம் அளித்தார். அமித்ஷா பேசியதாவது:எம்பி ஓவைசி நிகழ்ச்சிக்கு செல்லும் போது பயண விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை. இதனால் உரிய பாதுகாப்பு அளிக்க இயலாமல் போனது. சம்பவம் நடந்த இடத்தில் 3 புல்லட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. எம்பி ஓவைசி பாதுகாப்பை நாங்கள் அதிகரிக்க முடிவு செய்தோம். ஆனால் அதனை … Read more

குணமடைந்தார் சிரஞ்சீவி: காட்பாதர் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது

தெலுங்கு நடிகர் சிரஞ்சிவிக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுபற்றி அறிவித்துவிட்டு தனது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுவிட்டார். இதனால் அவர் நடித்து வந்த காட்பாதர் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது பூரண நலமடைந்துள்ள சிரஞ்சீவி நேற்று ஐதராபாத்தில் மீண்டும் தொடங்கிய காட்பாதர் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்த படத்தில் சிரஞ்சீவியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மோகன்ராஜா இயக்குகிறார். இது மலையாளத்தில் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளிவந்து … Read more

லதா மங்கேஷ்கருக்கு இரங்கல்; பார்லி.,யில் மவுன அஞ்சலி| Dinamalar

புதுடில்லி: மறைந்த பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு பார்லியின் இரு அவையிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டு, எம்.பி.,க்கள் அனைவரும் மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஒரு மணி நேரத்துக்கு அவை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்தியாவின் இசைக்குயில் என்று போற்றப்பட்ட பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் தனது 92வது வயதில் நேற்று (பிப்.,6) காலமானார். அவரது உடல் அரசு மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது. அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில், லதா மங்கேஷ்கர் … Read more

பலாத்கார வீடியோ வெளியானதாக தகவல் : சுப்ரீம் கோர்ட், பிரதமருக்கு நடிகை கடிதம்

கடந்த 2017ம் ஆண்டு தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் மலையாள முன்னணி நடிகரான திலீப், அவரது கார் டிரைவர் சுனில் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் திலீப் மட்டும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பாலியல் பலாத்காரத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோவை திலீப் பார்த்து ரசித்ததாக கூறப்பட்டது. அந்த வீடியோவை போலீசார் கைப்பற்றி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். தற்போது இந்த வீடியோ வெளியாகி விட்டதாக … Read more

ஹிந்து கோவில்கள் சூறையாடல்; கனடாவில் நீடிக்கும் பதற்றம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டொரோன்டா : கனடாவில், ஹிந்து கோவில்கள் தொடர்ந்து சூறையாடப்பட்டு வருவதால் நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. வட அமெரிக்க நாடான கனடாவின் பிராம்ப்டன் பகுதியில் கடந்த மாதம் ஆஞ்சநேயர் கோவிலை சில மர்ம நபர்கள் சூறையாடினர். அந்த சம்பவத்தை தொடர்ந்து அம்மன் கோவில், சிவன் கோவில், ஜெகன்நாதர் கோவில் என அடுத்தடுத்து பல கோவில்கள் சூறையாடப்பட்டன. கடந்த 30ம் தேதி மிசிசவுகா பகுதியில் உள்ள ஒரு ஹிந்து … Read more

இந்தியாவில் ஒரு லட்சத்திற்கும் கீழே குறைந்த தினசரி கோவிட் பாதிப்பு| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 83,876 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 83,876 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,22,72,014 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 1,99,054 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,06,60,202 ஆனது. தற்போது 11,08,938 பேர் சிகிச்சையில் உள்ளனர். கோவிட் காரணமாக 895 … Read more