செல்போன் பார்த்துக்கொண்டே தண்டவாளத்தில் தவறி விழுந்த பயணி.. விரைந்து சென்று மீட்ட சிஐஎஸ்எப் வீரர்..! <!– செல்போன் பார்த்துக்கொண்டே தண்டவாளத்தில் தவறி விழுந்த பயணி… –>

டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைமேடையின் விளிம்பில் இருந்து தண்டவாளத்தில் விழுந்த பயணியை மத்தியத் தொழில் பாதுகாப்புப் படைவீரர் ஓடிச் சென்று மீட்ட காட்சி வெளியாகியுள்ளது.

சதாரா மெட்ரோ நிலையத்தில் செல்போனைப் பார்த்துக்கொண்டே உலவிய பயணி நடைமேடையின் விளிம்பில் இருந்து கீழே விழுந்தார். எதிர்ப்புற நடைமேடையில் வந்த மத்தியத் தொழில் பாதுகாப்புப் படைவீரர் விரைந்து சென்று தண்டவாளத்தில் இருந்து அந்தப் பயணியைத் தூக்கி நடைமேடையில் ஏற்றிவிட்டார்.

மெட்ரோ ரயில் வருமுன் பயணியை விரைந்து மீட்ட இந்தக் காட்சியை சிஐஎஸ்எப் டுவிட்டரில் வெளியிட்டுள்ளனர்.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.