நாமல் ராஜபக்சவும் நாட்டைவிட்டு வெளியேறினார்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3ம் திகதி விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியை இராஜினாமா செய்த நாமல் ராஜபக்ச, அன்றிரவே டுபாய் சென்றுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக நாமல் ராஜபக்சவின் குடும்பத்தினர் (மனைவி, மகன் மற்றும் மாமியார்) ஏப்ரல் 2ம் திகதி வெளிநாட்டிற்கு சென்று விட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. நாட்டில் ஏற்பட்டுள்ள … Read more

நாட்டை விட்டு வெளியேறினார் நிஸ்ஸங்க சேனாதிபதி!

அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவரும் அரசாங்கத்தில் செல்வாக்கு மிக்கவருமான நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இரகசியமாக நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் மாலைதீவுக்கு சென்றுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. அவர் விமான நிலையத்திற்கு வந்தபோது, விமான நிலையத்தின் வெளியேறும் முனையத்தின் அனைத்து பாதுகாப்பு கமராக்கள் கொண்ட கமரா அமைப்பு செயலிழந்ததாக கூறப்படுகிறது. இன்று காலை 8.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலைய புறப்படும் முனையத்தில் இருந்து புறப்பட்ட அவர் UL102 … Read more

கோட்டாபயவை வீட்டுக்கு அழைக்கும் ஸ்பைடர் மேன்! (Photo)

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்றுள்ள நிலையில், அவர் விரைவில் பதவி விலக வேண்டும் என நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர். நாடு முழுவதும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராகவும் பெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும் பொருளாதார நெருக்கடி மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இலங்கையை தாண்டி வெளிநாடுகளில் வசிக்கும் … Read more

நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாதிவெல வீடுகள் சுற்றிவளைப்பு! (Video)

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் வலுத்துள்ள நிலையில், மாதிவெல பகுதியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ வீடுகள் தற்போது சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், எரிபொருள், எரிவாயு, மருந்து பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்கள் பொருட்களை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் நீண்ட நேரம் மின் வெட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இந்நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. … Read more

அரசாங்கத்திற்கு எதிராக போராட்ட களத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர்! (Photo)

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்க எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் பொது மக்களினால் முற்றுகையிடப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான இந்த போராட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கு அப்பால் பலரும் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில், இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்னவும் அரசாங்கத்திற்கு எதிரான கொழும்பில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.   Source link

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகேவின் வீட்டின் முன்னால் பதற்றம் (Photos)

முன்னாள் அமைச்சர் காமினி  லொக்குகேவின் வீட்டின் முன்னால் தற்போது பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.   பிலியந்தலையில் உள்ள அவரது வீட்டின் முன்னால் பொதுமக்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இதன்போது அங்கிருந்த பேனர் ஒன்றினை ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்து எரித்து தமது எதிர்ப்பினை வெளியிட்டுவருவதாக குறிப்பிடப்படுகின்றது.   Source link

அரசை திணறடிக்கும் போராட்டங்கள்: பொதுமக்களுடன் இணைந்த பொலிஸ் – செய்திகளின் தொகுப்பு

நாடாளவிய ரீதியில் மக்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் காரணமாக அரசாங்கத்திற்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொட்டாவ பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பொது மக்களுடன் பொலிஸ் அதிகாரி ஒருவர் இணைந்து போராட்டத்தினை வலுப்படுத்தியுள்ளார். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலைநேர செய்திகளின் தொகுப்பு,  Source link

மஹிந்தவின் வீட்டிற்கு முன்னால் தற்போது பதற்றம் – மக்கள் மீது தண்ணீர் தாக்குதல் (Video)

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டிற்கு முன்னால் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.  ஹம்பாந்தோட்டை, தங்காலையில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டிற்கு அருகில் மக்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை முதல் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டத்தின் பொலிஸாரின் பாதுகாப்பு கடவைகளை உடைத்து மக்கள் உள்ளே நுழைந்தனர். இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்துள்ளனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் … Read more

போராட்டத்தில் கலந்து கொள்ள முயற்சித்த பௌத்த தேரரரை ஆத்திரமடைந்து விரட்டிய பொதுமக்கள்

பத்தரமுல்லையில் இன்று இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில் கலந்துகொள்ள முற்பட்ட ஜனசெத பெரமுனவின் தலைவர்  பத்தரமுல்லே சீலரதன தேரரை கலந்து கொண்ட  ஆர்ப்பாட்டக்காரர்கள் திருப்பி அனுப்பியுள்ளனர். பத்தரமுல்லே சீலரதன தேரர்,  பொதுமக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடத்திற்கு வருகைத் தந்த வேளை அவர் மீது ஆத்திரமடைந்த மக்கள் அந்த இடத்தில் இருந்து அவரை விரட்டியுள்ளனர்.  அவருக்கு பேசுவதற்கான சந்தர்ப்பத்தையும் வழங்க பொதுமக்கள் மறுத்துள்ளனர்.   போராட்டக்காரர்களால் வெளியேறுமாறு பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து,  பத்தரமுல்லே சீலரதன தேரர் போராட்டத்தை கைவிட்டு வெளியேறினார். “It … Read more

சமூக ஊடகங்களை நாட்டில் முற்றாகத் தடை செய்ய முடியும்! விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோர் தமது நெறிமுறைகளை மீறும் வகையில் செயற்படும் போது சமூக ஊடகங்களின் பாவனையை நாட்டில் முற்றாகத் தடை செய்ய முடியும் என தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது. சமூகத்தில் தனிப்பட்ட உறவுகளை வளர்ப்பது போன்ற இலக்குகளின் அடிப்படையில் சமூக ஊடகங்கள் உருவாக்கப்படுகின்றன. எவ்வாறாயினும், சமூக ஊடகங்களை வன்முறைச் செயல்களை ஊக்குவிப்பதற்காக பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது, ஏனெனில் அது ஒழுக்க நெறிமுறைகள் மற்றும் அதன் கோட்பாடுகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பேஸ்புக் போன்ற சமூக … Read more