நல்ல முயற்சி ருத்து; ஆனால் மீண்டும் முயற்சிக்காதீர்கள்! – கடுப்பேற்றிய சி.எஸ்.கே; வெறியான ரசிகர்கள்!

மும்பைக்கு எதிராக அவ்வளவு சிறப்பாக வென்ற பிறகு சேப்பாக்கத்தில் சொந்த மண்ணில் சென்னை மிக மோசமாக தோற்றிருக்கிறது. வான்கடேவில் வென்ற பிறகு அதிர்ச்சியடைந்த ப்ளெம்மிங், ‘உன்னாலே முடியாதென்று ஊரே சொல்லும் நம்பு!’ ‘நீ ஒண்ணும் கவலைப்படாதே ப்ரோ. நாங்க உன் கூட இல்ல’ ‘நீ கான்பிடண்டா இரு. உன்னால முடியாது’ என அத்தனை வீரர்களையும் கட்டி வைத்து டீமோட்டிவேட் செய்திருப்பார் போல. அத்தனை நெகட்டிவ் எனர்ஜியோடு இறங்கி ருத்துராஜ் & கோ சொதப்பியிருக்கின்றனர். CSK vs GT … Read more

”உங்கள் மீதான நம்பிக்கையே வெற்றிக்கு வழி வகுக்கும்”- முன்னாள் ஓய்வு பெற்ற காவல் ஆணையர் ரவி பேச்சு!

ஆனந்தவிகடன், கிங்க் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமி இணைந்து வழங்கும் ”நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்- UPSC/TNPSC வழிகாட்டி நிகழ்ச்சி” இன்று (26.04.2026) தூத்துக்குடி, வ.உ.சிதம்பரம் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முன்பதிவு செய்த மாணவ, மாணவிகள் குறித்த நேரத்திற்கு முன்னதாகவே அரங்கிற்கு வருகை புரிந்தனர். முதலில் பேசிய கல்லூரியின் முதல்வர் முனைவர்.வீரபாகு, “நம் ஒவ்வொருவருக்கும் ஓர் இலக்கு இருக்க வேண்டும். அந்த இலக்கினை எப்படி அடைவது என சிந்திக்க வேண்டும். பின், அதற்காக செயலாற்ற வேண்டும். எல்லாவற்றிற்கும் … Read more

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டக்காரர்களே உங்களுக்கு ஒரு குட் நியூஸ்; இந்த `3' நாள்களுக்கு மழை!

‘ஃபேனை 12 நம்பரில் வை டி மாலா’ என்பது போல, தமிழ்நாட்டில் தற்போது வெயில் கொளுத்தி தள்ளுகிறது. இந்த நேரத்தில் சென்னை வானிலை ஆய்வு மையம் குட் நியூஸைப் பகிர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இந்த வாரம் மழைக்கான வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது… 27-04-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது … Read more

ராகுல், அகிலேஷ் கொடும்பாவி எரிப்பு; சட்டென பா.ஜ.க பெண் எம்.எல்.ஏ-வுக்கு நேர்ந்த விபரீதம்!

உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் என்ற இடத்தில் பா.ஜ.கவினர் காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரின் கொடும்பாவியை எரிக்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்து இருந்தனர். இந்த நிகழ்வுக்கு பா.ஜ.க எம்.எல்.ஏ அனுபமா ஜெய்ஸ்வால் என்பவர் தலைமை தாங்கினார். திரளான தொண்டர்கள் இதற்காக மாவட்ட நீதிபதி வீட்டிற்கு அருகில் கூடியிருந்தனர். கொடும்பாவியை தீவைப்பதற்கு முன்பு அங்கு பட்டாசு வெடிக்க ஏற்பாடு செய்திருந்தனர். அனுபமா கொடும்பாவிகளுக்கு தீவைத்தபோது தீ திடீரென … Read more

எல்லா பதிவுகளுக்கும் ஆதார் கார்டை கேட்கிறார்களே; ஆனால், 'இந்த' பதிவுகளுக்கு ஆதார் கார்டு செல்லாது!

வங்கி முதல் டிக்கெட் பதிவு வரை எங்கே சென்றாலும், நம்மிடம் கட்டாயம் கேட்கப்படும் ஒரு ஆவணம் – ஆதார் கார்டு அல்லது ஆதார் கார்டு எண். ஆனால், அப்படிப்பட்ட ஆதார் கார்டு இந்திய குடியுரிமைக்கான ஆவணம் அல்ல. இதை ஆதார் கார்டிலேயே குறிப்பிட்டிருப்பார்கள். ஆதார் கார்டு என்பது தற்போது இந்தியாவில் இந்த முகவரியில் வசிக்கிறோம் என்பதற்கான அடையாள ஆவணம் மட்டுமே. ஆதார் அடையாள அட்டை (For Representation) ஈரான் போர் முடிந்தாலும் சரி: கச்சா எண்ணெய் விலை … Read more

டெல்லியிலிருந்து கிளம்பிய ஸ்விட்சர்லாந்து விமானம்; இன்ஜினில் தீ பிடித்து விபத்து: 6 பயணிகள் காயம்!

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சூரிச் நகருக்கு Flight No. LX147 என்ற விமானம் புறப்படத்தயாராக இருந்தது. விமானத்தில் 223 பயணிகள் இருந்தனர். இன்று அதிகாலை விமானம் புறப்பட்டபோது அதன் ஒரு இன்ஜின் வேலை செய்யவில்லை. அதோடு அந்த இன்ஜின் உடனே தீப்பிடித்துக்கொண்டது. இன்ஜினில் இருந்து புகை அதிக அளவில் வெளியேறியது. இதனால் பைலட் உடனே விமானத்தை மேற்கொண்டு இயக்காமல் நிறுத்தினார். விமான நிலையத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் விமானத்தில் இருந்த 6 … Read more

ஆம்ஆத்மியைத் தொடர்ந்து தாக்கரேயின் சேனாவிற்கு BJP குறி: டெல்லியில் உத்தவ் MP-கள் தனியாக ஆலோசனை?!

மகாராஷ்டிராவில் ஏற்கெனவே சிவசேனா இரண்டாக உடைந்துள்ளது. இப்போது துணைமுதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா தான் உண்மையான சிவசேனாவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா புதிய சின்னத்துடன் செயல்பட்டு வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா படுதோல்வியை சந்தித்தாலும் அதற்கு முன்பாக நடந்த மக்களவை தேர்தலில் 9 தொகுதியில் அக்கட்சி வெற்றி பெற்றது. இப்போது இந்த எம்.பி.க்களுக்கு பா.ஜ.க குறிவைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மராத்வாடாவைச் சேர்ந்த பிரபலமான உத்தவ் தாக்கரே கட்சி … Read more

மணிப்பூர்: முதல்வர் வீட்டருகே அரங்கேறிய போர்க்களம்: 22 பேர் மருத்துவமனையில் அனுமதி!

கடந்த ஏப்ரல் 7-ம் தேதி மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தின் ட்ராங்லாபி பகுதியில் நடந்த குண்டுவெடிப்பில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர். இத்தாக்குதலில் தொடர்புடையவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி, மணிப்பூர் ஒருமைப்பாட்டிற்கான ஒருங்கிணைப்புக் குழு (COCOMI) சார்பில் சனிக்கிழமை (ஏப்ரல் 25) பேரணி நடைபெற்றது. இம்பாலின் பாபுபாரா பகுதியில் உள்ள முதலமைச்சர் யும்னம் கேம்ச்சந்த் சிங்கின் இல்லத்தை நோக்கி நான்கு திசைகளிலிருந்தும் போராட்டக்காரர்கள் திரண்டு வந்தனர். மணிப்பூர் சோகம் இம்பால் கிழக்கு மாவட்டத்தின் குரை லாம்லாங் பகுதியில் பாதுகாப்புப் படையினர் … Read more

“லஞ்சப் பணத்தை எலிகள் தின்றுவிட்டன?" – அதிகாரியின் தண்டனையை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம்!

லஞ்சம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட பீகார் அரசு அதிகாரியின் தண்டனையை நிறுத்திவைத்த உச்ச நீதிமன்றம், வழக்கின் முக்கிய ஆதாரமான பணத்தை ‘எலிகள் தின்றுவிட்டன’ என்ற விளக்கத்தைக் கேட்டு கடும் அதிருப்தியும் வியப்பும் தெரிவித்தது. பீகார் மாநிலத்தில் குழந்தை மேம்பாட்டுத் திட்ட அதிகாரியாகப் பணியாற்றி வந்த அருணா குமாரி என்பவர், ரூ.10,000 லஞ்சம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. … Read more

Doctor Vikatan: குறைந்த ரத்த அழுத்தம் (Low BP) இருந்தால்,உப்பு அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டுமா?

Doctor Vikatan: எனக்குப் பல வருடங்களாக குறைந்த ரத்த அழுத்த பாதிப்பு உள்ளது.  சில சமயங்களில் அது ரொம்பவும் தீவிரமாகி, தலைச்சுற்றல் ஏற்படும். அப்போது சட்டென உப்பு அதிகமான உணவுகளைச் சாப்பிடுவேன். லோ பிபி உள்ளவர்கள் இயல்பிலேயே உணவில் உப்பு கூடுதலாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது உண்மையா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர் அம்பிகா சேகர் குறைந்த ரத்த அழுத்தம் (Low BP) உள்ளவர்கள் உணவில் அதிக உப்பைச் சேர்த்துக் … Read more