தற்போதைய பொருளாதார அபிவிருத்தி முயற்சிகளில் பங்கேற்று தாய்நாட்டிற்கு வளம் சேர்க்க முன்வாருங்கள். – புலம்பெயர் இலங்கையர்களிடம் பிரதமர் தினேஷ் குணவர்தன வேண்டுகோள்.
தமது தொழில்சார் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வதன் மூலமும், அந்தந்த துறைகளில் உள்ள புதிய முறைமைகளைப் பின்பற்றுவதன் மூலமும் தாய்நாட்டின் தற்போதைய பொருளாதாரப் பயணத்தில் இணைந்து கொள்ளுமாறு இலங்கை புலம்பெயர் சமூகத்திடம் பிரதமர் தினேஷ் குணவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார். பெய்ஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் 2024.03.25 ஆந் திகதி இடம்பெற்ற சீனாவில் உள்ள இலங்கை தொழில் வல்லுநர்களுடனான சந்திப்பின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் போன்ற துறைகளில் வெளிநாடுகளில் உள்ள … Read more