தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம்

எரிபொருள் விலை அதிகரிப்பை அடுத்து விவசாயிகளும், வர்த்தகர்களும் மேலும் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு வருகை தந்த சிலர் தெரிவித்துள்ளனர். இந்த மத்திய நிலையத்திற்கு கிடைக்கும் மரக்கறியின் அளவு பெருமளவில் குறைந்துள்ளது. பழவகைகளைக் கொள்வனவு செய்வதற்காக வருகை தரும் வர்த்தகர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. சடுதியாக எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமை உற்பத்திகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

நாளை முதல் மின்வெட்டில் மாற்றம்

நாளை (27) முதல் ஜூலை 3ஆம் திகதி வரை 3 மணி நேர மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு(PUCSL) இதனை அறிவித்துள்ளது. நேர விபரங்கள் அறிவிப்பு   A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய பிரிவுகளுக்கு நண்பகல் வேலையில் இரண்டு மணி நேரம் மற்றும் நாற்பது நிமிடங்கள் மின்வெட்டு … Read more

நாளை முதல் எரிபொருள் வழங்குவதில் புதிய திட்டம்! அரசாங்கம் தீர்மானம்

எரிபொருளை விநியோகம் செய்வதற்கு டோக்கன் முறையை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த வேலைத்திட்டம் திங்கட்கிழமை (27) முதல் நடைமுறைக்கு வரும் எனவும், இந்தச் செயற்பாடுகள் சுமூகமாக நடைபெறுவதை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை காவல்துறை மற்றும் இலங்கை இராணுவத்தினரின் உதவிகள் பெறப்படும் எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். தாமதமான எரிபொருள் ஏற்றுமதி குறித்த சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளித்த அமைச்சர், பெட்ரோல், டீசல், கச்சா எண்ணெய் மற்றும் ஜெட் எரிபொருள் இறக்குமதியில் அமைச்சகத்தின் … Read more

செவ்வாய் முதல் நிறுத்தப்படும் சேவைகள்! வெளியானது அறிவிப்பு

பேருந்து கட்டணம் திருத்தப்படவில்லை எனில்,  செவ்வாய்க்கிழமை முதல் பேருந்து சேவைகள் நிறுத்தப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. டீசல் விலை அதிகரிப்புடன் வருடாந்த பேருந்து கட்டணத் திருத்தம் தொடர்பில் நாளைய தினம் பரிசீலிக்குமாறு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் (LPBOA) இன்று கோரிக்கை விடுத்துள்ளது. நிறுத்தப்படும் பேருந்து சேவைகள் இதற்கு சாதகமான பதில் கிடைக்காவிடின் செவ்வாய்க்கிழமை (28) முதல் பேருந்து சேவைகள் நிறுத்தப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் … Read more

இலங்கையை ஒரு மாதத்தில் மீட்க தயார் – நிபந்தனை விதித்த சுவிஸ் புலம்பெயர் அமைப்பு

இலங்கைக்கு தேவையான மாதாந்தம் 800 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கத் தயார் என இலங்கை தேசப்பற்றுள்ள புலம்பெயர் அமைப்பு தெரிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க தேசிய அரசாங்கம் ஊடாக பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டால் நாட்டுக்குத் தேவையான பணம் வழங்கப்படும் என சுவிட்சர்லாந்தின் லூசர்ன் பல்கலைக்கழக ஆய்வாளர் கலாநிதி நிலங்க சமரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து எப்படி மீள்வது? சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளில் இருந்து மீள்வது எப்படி? புதிய தேசியமாக நாடு … Read more

இன்று எரிபொருள் விநியோகிப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு

இன்றையதினம் எரிபொருள் பெற்றுக் கொள்ள கூடிய இடங்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.  லங்கா ஐஓசி நிறுவனம் நேற்று (25) திருகோணமலை முனையத்தித்தில் இருந்து 78 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை அனுப்பியுள்ளது. குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று எரிபொருளைப் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  விலை அதிகரிப்பு இந்த நிலையில், நாட்டில் எரிபொருட்களின் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இன்று (26) அதிகாலை 2.00 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் … Read more

அமெரிக்க உயர்மட்ட பிரதிநிதிகள் குழு இலங்கையை வந்தடைந்தது

அமெரிக்க உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவொன்று இன்றைய அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளது. அமெரிக்காவிற்கு சொந்தமான விசேட விமானமொன்றில் இந்தப் பிரதிநிதிகள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று காலை வந்தடைந்துள்ளனர். நெருக்கடி நிலை இலங்கையில் தற்பொழுது எதிர்நோக்கப்பட்டு வரும் நெருக்கடி நிலைமைகளுக்கு தீர்வு வழங்குவது குறித்து கலந்தாலோசனை செய்யும் நோக்கில் இந்தப் பிரதிநிதிகள் குழு இலங்கை வந்தடைந்துள்ளது. அமெரிக்க திறைசேரி திணைக்களம் மற்றும் ராஜாங்கத் திணைக்களத்தை பிரதிநிதித்துவம் செய்யும் இந்த பிரதிநிதிகள் குழு எதிர்வரும் 29ம் திகதி … Read more

வரிசையில் காத்திருந்த மக்களை நெகிழ வைத்த எரிபொருள் நிலைய உரிமையாளர்

இங்கிரிய பிரதேசத்தில் எரிபொருள் வரிசையில் காத்திருந்த மக்களை எரிபொருள் நிலைய உரிமையாளர் நெகிழ வைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பல நாட்களாக எரிபொருளுக்காக காத்திருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு இரவு பகலாக உணவு வழங்குவதற்கு எரிபொருள் நிலைய உரிமையாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். நெகிழ்ச்சி சம்பவம் இங்கிரிய உறுகல எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் கெலும் பிரசன்ன மற்றும் அவரது குழுவினர் அனைவரும் ஆற்றிய பணியை பொது மக்கள் பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். சில எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் … Read more

செவெரோடொனட்ஸ்க் நகரை விட்டு வெளியேறுங்கள்! உக்ரைன் இராணுவம் உத்தரவு

உக்ரைன் இராணுவம் செவெரோடொனட்ஸ்க் எனும் பகுதியில் இருக்கும் தங்கள் வீரர்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் 122-ஆம் நாளாக தொடர்ந்து வரும் நிலையில்,செவெரோடொனட்ஸ்க் என்னும் நகரத்தில் தீவிரமாக வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றது. சமீப நாட்களாக ரஷ்ய படையினர் அந்நகரத்தையும் அதனைச் சுற்றியிருக்கும் பகுதிகளையும் ஆக்கிரமித்து முன்னேறிக் கொண்டு வரும் நிலையில், அந்த நகரங்களில் இருக்கும் உக்ரைன் வீரர்களை முற்றுகையிட  திட்டமிட்டுள்ளனர். மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தும் ரஷ்யா எனவே, குறித்த … Read more

தமிழக நிவாரண பொருட்களை அனைவருக்கும் சரியான முறையில் வழங்குமாறு போராட்டம்

இலங்கை மக்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள நிவாரண பொருட்கள், உரிய வகையில் பங்கிடப்பட வேண்டும் என வலியுறுத்தி, கொட்டகலை, திம்புள்ள பகுதியில் உள்ள இரு தோட்டங்களை சேர்ந்த மக்கள் இன்று (25) கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். பெருந்தோட்டப்பகுதியில் வாழும் அனைத்து குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என திம்புள்ள மேல் மற்றும் கீழ் பிரிவு தோட்டங்களில் வாழும் மக்கள் வலியுறுத்தினர். தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள நிவாரணப் பொருட்களில் பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு அரிசி மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றது. … Read more