இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விநியோகம் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம்: மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடுகள்

தற்போதைய நிலைமைக்கு மத்தியில் இன்று (27) நள்ளிரவிலிருந்து ,ஜூலை மாதம் 10 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் பெற்றோலியக் கூட்டுத்தாபத்திடமுள்ள எரிபொருளை அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் விநியோகிப்பதற்கு இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏனைய அலுவலக மற்றும் அலுவல்கள் வீடுகளில் இருந்தே மேற்கொள்வதற்கான ஆலோசனை வழங்கப்படுவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இன்று (27)  மாலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியராளர் சந்திப்பில் அமைச்சர் இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,துறைமுகம் … Read more

இலங்கை முழுமையாக முடங்கும் ஆபத்து – 10ஆம் திகதி வரை அனைத்தும் நிறுத்தம்

இலங்கையில் மற்றுமொரு முடக்க நிலையை அறிவிக்க அரசாங்கம் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எரிபொருளுக்கு பாரிய நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்த மாதம் 10 திகதி நாட்டை முடக்கி வைக்க அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது.  இலங்கையில் 10ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவைகள் மாத்திரமே இயங்குவதற்கு எரிபொருள் வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் நடைமுறை இன்று நள்ளிரவு முதல் ஜுலை மாதம் 10ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் முன்னெடுக்க வேண்டும் … Read more

கொழும்பில் எரிசக்தி அமைச்சின் செயலாளரை சுற்றிவளைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள்

ஆர்ப்பாட்டக்காரர்களின் எதிர்ப்பு காரணமாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் அவரது காருக்குள்ளேயே சிக்கிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.  சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய ஊழியர்கள் குழு  இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  கொழும்பு, கொள்ளுப்பிட்டியிலுள்ள அமைச்சு வளாகத்தில் இன்று அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.  இரகசியங்களை வெளியிட முடியாது… தேக்கு கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தனியாரிடம் கையளிக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தமை தொடர்பில் ஆர்ப்பாட்டக்காரர்கள்  அறிந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  எனினும் அமைச்சரவை இரகசியங்களை … Read more

தீவிர நெருக்கடியில் இலங்கை! கோட்டாபயவை சந்தித்த அமெரிக்க உயர்மட்ட குழு வழங்கியுள்ள உறுதி

அமெரிக்க இராஜாங்க திணைக்களம் மற்றும் திறைசேரி திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்மட்ட அதிகாரிகள் குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், ஆசியாவுக்கான பிரதி உதவித் திறைசேரிச் செயலாளர் ரொபேர்ட் கப்ரோத் மற்றும் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான பிரதி உதவி இராஜாங்கச் செயலாளரான கெல்லி கெய்டர்லிங் ஆகியோர் இன்று (திங்கட்கிழமை) ஜனாதிபதியைச் சந்தித்து இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பில் கலந்துரையாடினர். உதவி வழங்குவதாக உறுதி இந்நிலையில், இந்த சந்திப்பு குறித்து டுவிட்டரில் … Read more

உச்சமடையும் எரிபொருள் நெருக்கடி நிலை! அரசாங்கத்தின் தொடர் முயற்சி பலனளிக்குமா..

நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலை கோரத் தாண்டவமாடி வருகின்றது.  எரிபொருளுக்கும், எரிவாயுவுக்கும், அத்தியாவசி உணவுப் பொருட்களும் பொதுமக்கள் வரிசையில் நின்று போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  ஒருவேளை உணவு என்பதே தற்போது பலருக்கு எட்டாக் கணியாக இருக்கின்ற நிலையே காணப்படுகின்றது.  ஏற்பட்டுள்ள துர்ப்பாக்கிய நிலை ஒரு நாள் பணிக்குச் செல்வதற்காக  எரிபொருள் வரிசையில் மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டிய கடும் துயரமான நிலையை தற்போது எதிர்கொண்டு வருகின்றோம்.   அதைவிட துயர் என்னவென்றால், எரிபொருள் வரிசையில் காத்திருந்து உயிரைவிட … Read more

அஜித் சொல்லி ஜெய் நடித்து மெகா ஹிட் படம், அவரே கூறிய உண்மை

ஜெய் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர். இவர் நடிப்பில் கடந்த வாரம் பட்டாம்பூச்சி என்ற படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ஜெய்யின் நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜெய் சமீபத்தில் ஒரு பேட்டியில், ஆரம்பத்தில் தான் எந்த படத்தை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பத்தில் இருந்தேன். அப்போது அஜித் சார் தான் சுப்ரமணியபுரம் படத்தை தேர்ந்தெடுத்தார், இதில் நடி என்று அவர் தான் சொன்னார். படமும் எனக்கு நல்ல பெயரை … Read more

எரிபொருள் விநியோகம் தொடர்பில் உறுதியாக தெரியவில்லை! காத்திருப்பதில் அர்த்தமில்லை – முக்கிய அறிவித்தல்

எரிபொருள் விநியோகம் வழமை போன்று இடம்பெறுமா என்பது உறுதியாகத்  தெரியவில்லை என பெட்ரோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.  நேற்றைய தினம் எரிபொருள் விநியோகம் செய்யப்படவில்லை எனவும் அந்த சங்கத்தின் இணைச் செயலாளர் சாந்த சில்வா தெரிவித்துள்ளார். வரையறுக்கப்பட்டமுன்பதிவே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரிய அசௌகரியம்  மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் கையிருப்பு காரணமாக எரிபொருள் தாங்கி ஊழியர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.   தேர்ந்தெடுக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அத்தியாவசிய சேவைகளுக்கான எரிபொருளை விநியோகிப்பதற்கான … Read more

இலங்கை மக்களுக்கு அதிகரிக்கும் சுமை! மண்ணெண்ணெய்யின் விலையும் அதிகரிக்கிறது

மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.  எரிசக்தி அமைச்சர் கஞ்சன  விஜேசேகர இது குறித்து அறிவித்துள்ளார்.  இதன்படி, எதிர்காலத்தில் மண்ணெண்ணெய் விலையை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.  எரிபொருள் விலை அதிகரிப்பு இந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டிருந்தது.  இதன்படி, 92 ஒக்டேன் பெட்ரோல் 50/- ரூபாவினால் விலை அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக 470/- ரூபாவாகும். 95 ஒக்டேன் பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை … Read more

இலங்கையில் பலர் கண்முன்னே விழுந்து மரணிக்கலாம்! யாழில் பகிரங்க எச்சரிக்கை

நாடு மிக மோசமாக நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது, அத்தியாவசிய உணவு, மருந்துகளுக்கு கூட பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, இந்த நிலை நீடித்தால் பசியாலும் மருந்தில்லாமலும் பலர் கண்முன்னே விழுந்து மரணிக்க நேரிடலாம் என ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திசாநாயக்க எச்சரித்துள்ளார். ஜே.வி.பியின் யாழ்ப்பாண மாவட்ட மாநாடு யாழில் உள்ள தனியார் விடுதியில் நேற்று இடம்பெற்றிருந்தது. இதில் தலைமை தாங்கி கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில், இந்த மோசமான நிலைக்கு தற்போதுள்ள ஆட்சியாளர்களே பொறுப்பு. … Read more

வாகன இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள்: 100% தேவையை பூர்த்தி செய்ய முடியாது

வாகன இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் வழங்கும் வேலைத்திட்டம் இன்று முதல் முன்னெடுக்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைவாக இன்று முதல் வாகன உரிமையாளர்களை பதிவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இருப்பினும் , எரிபொருளை கொண்டுவருவதில் ஏற்பட்ட தாமதத்தினால் இந்நடவடிக்கை உரிய தினத்தில் மேற்கொள்ள முடியாமற்போனதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். இதுதொடர்பாக 25 மாவட்டங்களின் செயலாளர்களுடன் கடந்த வெள்ளிக்கிழமையன்று கலந்துரையாடப்பட்டது. இதன் போது ஒவ்வொரு … Read more