இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விநியோகம் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம்: மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடுகள்
தற்போதைய நிலைமைக்கு மத்தியில் இன்று (27) நள்ளிரவிலிருந்து ,ஜூலை மாதம் 10 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் பெற்றோலியக் கூட்டுத்தாபத்திடமுள்ள எரிபொருளை அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் விநியோகிப்பதற்கு இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏனைய அலுவலக மற்றும் அலுவல்கள் வீடுகளில் இருந்தே மேற்கொள்வதற்கான ஆலோசனை வழங்கப்படுவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இன்று (27) மாலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியராளர் சந்திப்பில் அமைச்சர் இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,துறைமுகம் … Read more