புத்தாண்டின் உண்மையான உரிமை எமது பிள்ளைகளுக்கே உரித்தானதாகும்

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு அல்லது சித்திரைப் புத்தாண்டு இலங்கை தேசத்தின் மாபெரும் கலாசார விழாவாகும். இவ்வாறாக, மங்களகரமான சம்பிரதாயங்கள், அனுஷ்டானங்கள் மற்றும் சமயக் கிரியைகளுக்கு முன்னுரிமை அளித்து, பாரம்பரிய மரபுகளைப் பேணி, ஒரே நேரத்தில் ஒரே நோக்கத்துடன் ஒரே சுபநேரத்தில் ஒன்றிணைந்து செயற்படுவதை உலகில் வேறு எந்த நாட்டின் கலாச்சாரத்திலும் காண முடியாது. இயற்கையோடு ஒன்றித்திருந்த எமது முன்னோர்கள் புத்தாண்டில் அதை இன்னும் நிஜமாக்கினார்கள். அவர்களின் வழிவந்தவர்கள் என்ற முறையில் உணவுப் பாதுகாப்பு, சிக்கனம், கலாசாரம், … Read more

தமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதியிடமிருந்து சிறுவர் இல்லங்களுக்கு பரிசு

தமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய நாடளாவிய ரீதியிலிருக்கும் சிறுவர் மேம்பாட்டு நிலையங்களில் பராமரிக்கப்படும் இனிப்புப் பண்டங்கள் மற்றும் பரிசுப் பொதிகளை பகிர்ந்தளிக்கும் நிகழ்வு தேற்று (12) முன்னெடுக்கப்பட்டது. வீடுகள் அல்லது பெற்றோரின் அரவணைப்பு கிடைக்காவிட்டாலும் சகல பிள்ளைகளுக்கும் புத்தாண்டு மகிழ்ச்சிக் கிட்ட வேண்டும் என்ற நோக்கில், “சிறுவர் இல்லக் குழந்தைகளுக்கும் புத்தாண்டு” என்ற தொனிப்பொருளின் கீழ் ஜனாதிபதி அலுவலகம், “சிலோன் பிஸ்கட் கம்பனி” மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த வேலைத்திட்டம் … Read more

மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் 100 மி.மீ மழை..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஏப்ரல் 12ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஏப்ரல் 11ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. இன்று முதல் (11) நாட்டில் மழை நிலைமை தற்காலிகமாக அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் … Read more

இன்றும் (12) நாளையும் (13) மதுக்கடைகளை மூடுவது தொடர்பான அறிவிப்பு.

ஏப்ரல் 13 ஆம் திகதி புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஏப்ரல் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் விசேட அனுமதி பெற்ற இடங்கள் தவிர, கலால் உரிமம் பெற்ற ஏனைய அனைத்து சில்லறை விற்பனைக்கான மதுபானக் கடைகளையும் மூட வேண்டும் என்று கலால் ஆணையர் நாயகம் உத்தரவிட்டுள்ளார். சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் உரிமம் பெற்ற மூன்று நட்சத்திர வகுப்பிற்கு மேல் உள்ள ஹோட்டல்களில் தங்கி இருக்கும் சுற்றுலா பயணிகளுக்கு மற்றும் விசேட அனுமதி பெற்ற இடங்களுக்கு … Read more

IndiGo இலங்கையுடனான தொடர்பை வலுப்படுத்துகிறது – இன்று முதல் மும்பை-கொழும்பு நேரடி விமான சேவை

IndiGo ஏப்ரல் 12 முதல் மும்பை-கொழும்பு நேரடி விமானங்களை ஆரம்பிப்பதன் மூலம் இலங்கைக்கான தனது இணைப்பை விரிவுபடுத்தியுள்ளது. அதன்படி, IndiGo வாரத்தில் மூன்று முறை செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விமான சேவைகளை ஆரம்பித்துள்ளது. IndiGo கொழும்பில் இருந்து இந்தியாவின் மூன்று இடங்களுக்கு பயணிக்கிறது (சென்னை ஒரு நாளைக்கு இரண்டு முறை, பெங்களூர் ஒரு நாள் மற்றும் ஹைதராபாத் வாரத்தில் ஆறு நாட்கள்). இந்த புதிய பாதை விஸ்தரிப்பின் மூலம், இது நான்கு இடங்களுக்கு பயணங்களை மேற்கொள்ள … Read more

ஹெரோயின் விற்பனை செய்த ஒருவர் திருகோணமலையில் கைது

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து 2024 ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி திருகோணமலை சமுத்திரகம பிரதேசத்தில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது ஹெரோயின் விற்பனை செய்த ஒருவர் ஆறு (06) கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டார். அதன்படி, 2024 ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி திருகோணமலை சமுத்திரகம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த கூட்டுத் தேடுதல் நடவடிக்கையில், சந்தேகத்திற்கிடமான தற்காலிக அறையொன்றை கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை மகாவலி … Read more

நெடுந்தீவின் முன்னேற்றத்திற்கு விசேட நிதி –  அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு

நெடுந்தீவு பிரதேசத்தில் சுற்றுலாத்துறையை விருத்தி செய்தல் மற்றும் பிரதேசத்தின் உட்கட்கமைப்பு வசதிகளை மேம்படுத்தல் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளன. நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் (10.04.2024) நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே குறித்த விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற   இக்கலந்துரையாடலில், இவ்வாண்டு நடைமுறைப்படுத்தப்படும் வேலைத் திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன. அதேபோன்று பிரதேசத்தின் முன்னேற்றத்திற்கு அத்தியாவசியமான கடல் போக்குவரத்து, வீதிப் போக்குவரத்து, விவசாயம், கடற்றொழில், கால்நடை அபிவிருத்தி, நீர்பாசனம், … Read more

கல்வி, காணி,வீட்டு உரிமைகளை வழங்கி மக்களையும் பொருளாதாரத்தில் பங்குதார்களாக்குவோம்- ஜனாதிபதி

• கொழும்பு, கஜீமாவத்தையில் தீக்கிரையான வீடுகளுக்கு பதிலாக 294 வீடுகளுடன் ரன்திய உயன வீட்டுத்தொகுதி. • சீன நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் 1996 வீடுகள் இரண்டு வருடங்களில் மக்களிடம் கையளிக்கப்படும். • மேலும் 50,000 வீடுகளை நிர்மாணிக்கத் திட்டம். கல்வி, காணி, வீடு, வியாபார உரிமைகளை உறுதிப்படுத்தி.மக்களை பொருளாதாரத்தில் வலுவான பங்குதாரர்களாக மாற்றிக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார். பொருளாதாரத்தின் பங்குதாரர்களாக மக்களை மாற்றுவதன் மூலம், சரிவடையாத வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியுமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். … Read more

புத்தாண்டு சுபவேளை பத்திரம் ஜனாதிபதியிடம் கையளிப்பு 

தமிழ் சிங்களப் புத்தாண்டுக்கான சுபவேளை குறிப்புப் பத்திரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சம்பிரதாய  முறைப்படி நேற்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அரச சுபநேர கணிப்புக் குழுவினால் தயாரிக்கப்பட்ட சுபவேளை குறிப்புப் பத்திரமே இவ்வாறு ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. புத்தசாசன, சமய கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க சம்பிரதாய முறைப்படி  ஜனாதிபதிக்கு வழங்கி வைத்தார். புத்தாண்டு பிறப்பு, புண்ணிய காலம், உணவு சமைத்தல், அடுப்பு பற்றவைத்தல், உணவு உண்ணல், தலைக்கு எண்ணெய் … Read more

இலங்கையின் இறைமை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அமெரிக்காவின் முழு ஆதரவு

இலங்கையின் இறைமை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அமெரிக்காவின் முழுமையான ஆதரவு கிடைக்குமென ஐக்கிய அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலிவன் (Jake Sullivan) உறுதியளித்துள்ளார். தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்கவுடன் நேற்று (10) நடந்த தொலைபேசிக் கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பல முக்கிய விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன். விரைவான பொருளாதார முன்னேற்றத்தை அடைவதற்கான இலங்கையின் தொடர்ச்சியான முயற்சிகளைப் பாராட்டினார். … Read more