சிவகார்த்திகேயனும், நயன்தாராவும்: இந்த மேட்டர் தெரியுமோ?

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிவகார்த்திகேயனுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் சிவகார்த்தியேனின் அசுர வளர்ச்சி பற்றி பார்ப்போம். சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து இன்று கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் சிவகார்த்திகேயன் . தனுஷ் தயாரித்த எதிர்நீச்சல் படம் தான் சிவகார்த்திகேயன் கெரியரில் திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தில் வந்த சத்தியமா நீ எனக்கு தேவையே இல்லை பாடலுக்கு சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து தனுஷும் ஆடினார். அந்த பாடலுக்கு நயன்தாராவும் … Read more

ஆபாச வசனங்கள்; `கங்குபாய்' அலியாவை காபி அடித்த சிறுமி; குவியும் கண்டனங்கள்!

ஆலியா பட் நடித்துள்ள இந்தி திரைப்படம் `கங்குபாய் கத்தியவாடி’. இதனை சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ளார். இப்படம் பிப்ரவரி 25 அன்று திரையரங்கில் வெளியாகவுள்ளது. ஆனால் இப்படம் வெளியாவதற்கு முன்பே சர்ச்சையில் சிக்கியுள்ளது. மும்பை பாலியல் தொழிலாளியான கங்குபாய் என்ற பெண்ணை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதில், பாலியல் தொழில் பற்றிய வசனம் ஒன்றை பீடி பிடித்தபடி ஆலியா பட் பேசியுள்ளார். ஆலியா “திரைப்படம் என்ற பெயரில் … Read more

பிரபல மலையாள நடிகர் கோட்டயம் பிரதீப் காலமானார்

பிரபல மலையாள நடிகர் கோட்டயம் பிரதீப் மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 61. 2001-ஆம் ஆண்டு ஐ.வி சசி இயக்கிய ‘ஈ நாடு இன்னலே வரே’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான கோட்டயம் பிரதீப் பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். 2010-ஆம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத்தொடர்ந்து, ‘ராஜா ராணி,’ ‘நண்பேன்டா’, ‘தெறி’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் கோட்டயம் பிரதீப் நடித்துள்ளார். … Read more

‛உறவுகள் தொடர்கதை' – மீண்டும் இணைந்த இளையராஜா, கங்கை அமரன்

இசை அமைப்பாளர் இளையராஜாவின் உடன்பிறந்த தம்பி கங்கை அமரன். ஆரம்பத்தில் இருவரும் இணைந்து பணியாற்றினார்கள். அதன் பிறகு கங்கை அமரன் தனியாக படங்களுக்கு இசை அமைக்கத் தொடங்கினார். படங்களை இயக்கவும் செய்தார். அவரது இயக்கத்தில் வெளிவந்த கரகாட்டக்காரன் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. ஒரு கட்டத்தில் இளையராஜாவுக்கும், கங்கை அமரனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இவர்களின் வாரிசுகள் பேசிக் கொண்டிருந்தாலும் இவர்கள் இருவரும் பேசிக் கொள்ளாமல், சந்தித்துக் கொள்ளாமல் இருந்து வந்தனர். குடும்ப நிகழ்வுகள், விழாக்களில் … Read more

தனுஷ் கூட இருக்கும் அந்த பெண் யார் தெரியுமா ? இது அவங்களுக்கு தெரிஞ்சா என்ன ஆகுமோ..!

நடிகர் தனுஷ் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சில சோகங்களை மறக்க தற்போது தன் முழு கவனத்தையும் படத்தின் மீது செலுத்தி வருகிறார். சமீபத்தில் ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்த தனுஷ் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். அவரை அணுகி சமாதானம் செய்ய முயற்சிப்போரை தான் ஷூட்டிங்கில் இருப்பதாக கூறி புறக்கணித்து விடுகிறாராம் தனுஷ். விவாகரத்தை அறிவித்தபோது ஹைதராபாத்தில் வாத்தி படப்பிடிப்பில் இருந்தார் தனுஷ். அதேசமயம் ஐஸ்வர்யா தான் இயக்கும் ஆல்பம் பாடல் விஷயமாக ஹைதராபாத்தில் தான் இருந்தார். அதன் … Read more

`ஒவ்வொரு இன்னிங்ஸிலும் செஞ்சுரி' – சிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷல் ஆல்பம்!

சிவகார்த்திகேயன் ”உனக்கு ஆங்கரிங் வரலைப்பா… ஏதோ மிஸ் ஆகுது” என முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆக்கப்பட்டவர்தான் சிவகார்த்திகேயன். ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் அவர்தான் டி.வி சூப்பர் ஸ்டார். டி.வி-யிலிருந்து சினிமாவுக்குள் வந்தார் சிவகார்த்திகேயன். ‘டி.வி முகங்களுக்கு சினிமாவில் கைதட்டல் விழாது’ என்பது கோலிவுட்டின் கப்ஸா கதைகளில் ஒன்று. அதனை காலி செய்தார் சிவா. ‘ஏகன்’ படத்தில் இவர் நடித்த பகுதிகள் எடிட்டிங்கில் வெட்டப்பட, ‘வேட்டை மன்னன்’ படம் வெளியாகாமல் போக, தமிழ் சினிமா பாண்டிராஜ் மூலமாக … Read more

பிப்., 18ல் சூர்யாவின் "எதற்கும் துணிந்தவன்" டீசர் வெளியீடு

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் மார்ச் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என சூர்யா ரசிகர்கள் காத்திருந்த நிலையில் வருகின்ற பிப்ரவரி 18ஆம் தேதி மாலை 6 மணிக்கு டீசர் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் சத்யராஜ் சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெய பிரகாஷ் … Read more

சிவகார்த்திகேயனுக்கு முதல் பட வாய்ப்பு எப்படி கிடைத்தது தெரியுமா? வெளியான சுவாரஸ்யமான தகவல்..!

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் தற்போது கொண்டாடப்படும் நடிகராக உள்ளார். ரஜினி, விஜய்க்கு அடுத்து அதிக குழந்தை ரசிகர்களையும், குடும்ப ரசிகர்களையும் கொண்ட நடிகராக வலம் வருகிறார். இதை விஜய்யே ஒரு மேடையில் சொல்லியிருக்கிறார். இந்நிலையில் இன்று சிவகார்த்திகேயன் தனது 37 ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு ரசிகர்களும் திரைப்பிரபலங்களும் வாழ்த்துக்களை கூறிய வண்ண இருக்கின்றனர். தற்போது காரைக்குடியில் SK20 படப்பிடிப்பில் பிஸியாக உள்ள சிவகார்த்திகேயன் அப்படக்குழுவுடன் தனது பிறந்தநாளை கொண்டாடுவார் என்று தெரிகிறது. இது மட்டும் … Read more

மீண்டும் டீச்சராக மாறும் அமலாபால்

திருமணத்திற்கு பின்னும் பல படங்களில் நடித்து வந்த அமலாபால், விவாகரத்து பெற்ற பிறகு முன்னைவிட தீவிரமாக படங்களில் நடிப்பார் என நினைத்தால் அதற்கு மாறாக படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களாக, நாயகியை மையமாக வைத்து உருவாகும் படங்கள் என நடித்து வருகிறார். பிரித்விராஜ் ஜோடியாக அவர் நடிக்கும் ஆடுஜீவிதம் படமும் கூட பாதி தான் முடிவடைந்துள்ளது. இந்தநிலையில் தற்போது மலையாளத்தில் டீச்சர் என்கிற படத்தில் நடிக்கிறார் அமலாபால்.. பஹத் பாசில் நடித்த … Read more

13 வருடங்களுக்குப் பிறகு நிகழ்ந்த அற்புத சந்திப்பு: ரசிகர்கள் நெகிழ்ச்சி..!

இந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் இளைராஜா. அவரின் சகோதரர் இயக்குனரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன். இவர் இயக்கத்தில் வெளிவந்த கரகாட்டக்காரன் உள்பட பல படங்களுக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு இளையராஜாவை, கங்கை அமரன் நேரில் சந்தித்து உரையாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இசைஞானி இளையராஜாவின் இளைய சகோதரர் கங்கை அமரன். இவர் இசையமைப்பாளர், பாடலாசிரியர் , திரைக்கதை ஆசிரியர், இயக்குநர், நடிகர் என பன்முகத் திறமைக்கொண்டவர். இவர் கோழி கூவுது, எங்க … Read more