“நான் உன்னை காதலிக்கிறேன்…" – எலான் மஸ்க் போல நடித்து மோசடி: 50,000 டாலரை இழந்த பெண்!

உலக பணக்காரர்கள் பட்டியலில் நீண்ட காலமாக இருக்கும் பிரபல்யமானவர் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க். அந்த எலான் மஸ்க் போல Deepfake தொழில்நுட்பம் மூலம் கொரியப் பெண் ஏமாற்றப்பட்ட செய்தி ஒன்றை கொரிய செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. பாதிக்கப்பட்டப் பெண் அந்த செய்தி நிறுவனத்திடம்,“இன்ஸ்டாகிராம் மூலம் எலான் மஸ்க் போன்ற அந்த நபர் அறிமுகமானார். ஆரம்பத்தில் நான் நம்பவில்லை. ஆனால், அந்த நபர், டெஸ்லா நிறுவனத்தின் அலுவலகம், அவர் பயணிக்கும் ஹெலிகாப்டர் போன்ற பல இடங்களின் புகைப்படங்களை … Read more

பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு ‘ஸ்மார்ட் கடிகாரம்’! கான்பூர் ஐஐடியின் அசத்தல் சாதனை…

கான்பூர்: பார்வை குறைபாடு உள்ளவர்கள் மற்றும் பார்வை தெரியாதவர்கள் பயன்படுத்தும் வகையில் ஹாப்டிக் டெக்னாலஜியுடன் ஒரு ஸ்மார்ட்வாட்ச் உருவாக்கப்பட்டு உள்ளதாக காப்பூர் ஐஐடி அறிவித்து உள்ளது. உலகில் சுமார் 49 மில்லியன் பார்வையற்றவர்களும், 285 மில்லியன் பார்வை குறைபாடு உள்ளவர்களும் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகில் உள்ள மொத்த பார்வையற்றவர்களில் சுமார் 20% பேர் இந்தியாவில் உள்ளனர்.  அவர்கள் ஒரு பொருளை, தொட்டு உணர்ந்தே தெரிந்துகொள்கின்றனர். ஆனால், அவர்களால் அனைத்தையும் எளிதில் உணர முடியாத நிலை உள்ளது. … Read more

சிரித்த முகத்துடன்.. \"நெருப்பு குழிக்குள்\" அந்த கடைசி நொடி.. சூரிய உதயத்தில் \"அஸ்தமனமான\" பெண்.. ஐயோ

ஜகார்த்தா: மகிழ்ச்சியின் உச்சத்தில் திளைத்து கொண்டிருந்தார் 31 வயது ஹுவாங்.. அதுதான் அவருக்கு கடைசி நிமிடம் என்று தெரியாது.. நெருப்புக்குழி அவரை காவு வாங்கி கொண்டுவிட்டது. உலகின் மிகச்சிறந்த சுற்றுலா தலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது தெற்கு ஆசிய நாடான இந்தோனேசியா.. இதற்கு முக்கியமான மொத்தம் 17,508 தீவுகளை இந்த நாடு கொண்டிருக்கிறது.. தீவுகள்: இங்கிருக்கும் Source Link

`ஔரங்கசீப்பின் சிந்தனைப் பள்ளியில் பயின்றவர்கள்…' – ராகுல், ஒவைசியைச் சாடும் அனுராக் தாக்கூர்!

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, “ஹைதராபாத்தில் ஓவைசிக்கு எதிராக ராகுல் காந்தி வேட்பாளரை நிறுத்தியிருக்கிறார். ஆனால் இருவரின் சிந்தனையும் ஒன்றுதான். இதில் யார் யாருக்கு பி டீம் எனத் தெரியவில்லை. ராகுல் காந்தி ராகுல் காந்தி அமேதியில் ஸ்மிருதி இரானி என்ற ஒரு பெண்ணால் தோற்கடிக்கப்பட்டதுபோல், ஹைதராபாத்தில் மாதவி லதா என்ற எங்கள் பெண் வேட்பாளரால் ஒவைசி தோற்கடிக்கப்படுவார். கர்நாடகாவில் லவ் ஜிஹாத் … Read more

நிலச்சரிவு.. சீன எல்லையில் போட்ட ரோடுகள் அடித்துச் செல்லப்பட்டன! அருணாச்சலப் பிரதேசத்தில் பாதிப்பு

இட்டாநகர்: அருணாச்சலப் பிரதேசத்தில் கனமழை காரணமாக கடும் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. நிலச்சரிவு காரணமாக அருணாச்சலப் பிரதேச – சீன எல்லையில் போடப்பட்ட சாலைகள் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன. அருணாச்சலப் பிரதேசத்தில் சீனா எல்லையை ஒட்டிய பகுதியான திபாங் பள்ளத்தாக்கில் பெய்து வந்த கனமழை காரணமாக கடும் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. நிலச்சரிவு காரணமாக ஹுன்லி மற்றும் அனினி நகரங்களுக்கு இடையேயான Source Link

கழுகார்: `அடித்துவிட்ட மலை… அப்செட் பன்னீர்’ முதல் `ஸ்வீட் பாக்ஸுகளைச் சுருட்டிய நிர்வாகிகள்’ வரை

அடித்துவிட்ட மலை… அப்செட் பன்னீர்!“தினகரனுக்கு அ.தி.மு.க-வா?” பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தேனியில் பிரசாரம் செய்தபோது, “ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு எடப்பாடி தலைமையில் அ.தி.மு.க இருக்காது. டி.டி.வி.தினகரன் தலைமையில்தான் இனி கட்சி செல்லும்” என்று பேசினார். அதைக் கேட்டு ஏகக் கடுப்பாகிவிட்டாராம் பன்னீர். தேர்தல் ஓய்ந்த பிறகு டெல்லி பா.ஜ.க நிர்வாகி ஒருவரிடம் பேசிய பன்னீர், “ராமநாதபுரம் தொகுதியில், என்மீது அ.தி.மு.க-காரர்களே பலர் பரிவு காட்டி எனக்கு ஒத்துழைக்கத் தொடங்கினார்கள். பன்னீர் செல்வம்-தினகரன் ஆனால், அந்த … Read more

பாட்னாவில் பயங்கரம்: ஜேடியு தலைவர் சௌரப் குமார் சுட்டுக்கொலை…

பாட்னா:  பாட்னாவில் பாட்னாவில் ஜனதா தளம்-யுனைடெட் (ஜேடியு) கட்சி தலைவர் மர்ம நபர்களால்  சுட்டுக் கொலை  செய்யப்பட்டார். நேற்று நள்ளிரவு இந்த கொலை சம்பவம் நடைபெற்றுள்ளதாக பீகார் மாநில  காவல்துறை தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தலையொட்டி, நாடு முழுவதும் தீவிர பிரசாரங்களை அரசியல் கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர். பீகார் மாநிலத்தில் ஏற்கனவே 4 தொகுதிகளில் தேர்தல் முடிவடைந்த நிலையில், 2வது கட்ட தேர்தல் சில தொகுதிகளில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், மாநில தலைவர்  பாட்னாவில் ஜனதா தளம்-யுனைடெட் … Read more

11 மணிக்கு மேல் இதை செய்யாதீங்க! வெயிலால் இவ்வளவு பிரச்சினை வருமா?

தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. தமிழ்நாட்டுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எல்நினோ ஆண்டின் தாக்கம் தொடர்வதால் கோடை வெயில் தாக்கமானது அதிகமாகவே இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். 1998இல் இருந்து 2017 வரை கிட்டத்தட்ட 1 லட்சத்து 66 ஆயிரம் மக்கள் கோடை வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் Source Link

'ராகுல் காந்தி Vs பினராயி விஜயன்' – ஹாட்டான கேரளா அரசியல் களம்!

கேரளா அரசியலில் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும்தான் கோலோச்சி வருகின்றன. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 16, இந்திய கம்யூனிஸ்ட் 4 தொகுதிகளிலும் போட்டியிட்டன. மறுபக்கம் ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் காங்கிரஸ் 16, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2, கேரள காங்கிரஸ்(மாணி), புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி தலா ஒரு தொகுதியிலும் களம் கண்டன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ஜ.க … Read more

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: மே 2-ம் தேதி விசாரணைக்கு ஆஜராவதாக நயினார் நாகேந்திரன் தகவல்…

சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம் தொடர்பான போலீஸ் விசாரணைக்கு  மே 2-ம் தேதி நேரில் ஆஜராக உள்ளதாக,  பாஜக நெல்லை தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரன்  தெரிவித்து உள்ளார்.  தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி பணம் என்னுடையது அல்ல என்றும் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலையொட்டி, பறக்கும்படை நடத்திய சோதனையின்போது, சென்னையில் இருந்து நெல்லைக்கு எடுத்துச்சென்ற ரூ.4 கோடி பணம்,  தாம்பரம் ரயில் நிலையத்தில் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. … Read more