திடீரென மேற்குவங்க சட்டப்பேரவையை காலவரையின்றி சஸ்பெண்ட் செய்த ஆளுநர் ஜக்தீப்!

மேற்கு வங்கத்தில் ஆளுநர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, திடீரென சட்டப்பேரவையை காலவரையின்றி சஸ்பெண்ட் செய்ததால் சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. அதேநேரத்தில், ஆளுநர் ஜக்தீப் தன்கருக்கும் ஆளும் கட்சிக்கும் இடையேயான பனிப்போர் தொடர்ந்தது. இந்த நிலையில் ஆளுநர் பதிவிட்ட டிவிட்டர் பதிவில், அரசமைப்பு சட்டம் 174-ன் படி, தனக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி, மேற்கு … Read more

‘‘உள்விவகாரம்’’- ஹிஜாப் விவகாரத்தில் உலக நாடுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் 

புதுடெல்லி: ஹிஜாப் பிரச்சனையில் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் வகையிலான கருத்துக்களை தெரிவிப்பதை பிற நாடுகள் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப், புர்கா அணிந்து வருவதற்கு இந்துத்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதால், 6 முஸ்லிம் மாணவிகள் தொடர் போராட்டத்தில் இறங்கினர். மங்களூரு, குந்தாப்பூர், ஷிமோகா, பத்ராவதி, சிக்மகளூரு உள்ளிட்ட இடங்களிலும் ஹிஜாப் அணிந்து … Read more

அரசு ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம் – முதல்வர் சூப்பர் அறிவிப்பு!

மாநிலத்தின் வளர்ச்சிக்காக தொலைதூர பகுதிகளில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு உதவித்தொகை வழங்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்து உள்ளார். தெலங்கானா மாநிலம் ஜான்கோன் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பேசியதாவது: மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்கள் , அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கடமை உணர்ச்சி காரணமாக கடந்த ஏழு ஆண்டுகளாக அனைத்துத் துறைகளிலும் நமது மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இதற்காக அனைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசுடன் … Read more

"ராம்ராஜ் காட்டன்" நிறுவனத்தின் விளம்பரத் தூதராக யாஷ் நியமனம்.! <!– &quot;ராம்ராஜ் காட்டன்&quot; நிறுவனத்தின் விளம்பரத் தூதராக யாஷ் நிய… –>

ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் விளம்பரப் பிரதிநிதியாக பிரபல கன்னட திரைப்பட கதாநாயகன் யாஷ் நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூரை சேர்ந்த முன்னணி ஆடை தயாரிப்பு நிறுவனமான ராம்ராஜ் காட்டன், வேட்டிகள், சட்டைகள் மற்றும் உள்ளாடைகளை தயாரித்து ஏற்றுமதி செய்து வருகிறது. கே.ஜி.எஃப் திரைப்படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமடைந்த யாஷ், ராம்ராஜ் நிறுவனத்தின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். Source link

தொழிலாளர்களின் நலனில் மோடி அரசு அக்கறை கொண்டுள்ளது – மத்திய மந்திரி உறுதி

குர்கிராம்: குர்கிராமில் நடைபெற்ற பணியாளர் அரசு காப்பீட்டு கழக (இ.எஸ்.ஐ.சி) கூட்டத்தில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை மந்திரி பூபேந்தர் யாதவ் பேசியதாவது: காலாண்டு வேலைவாய்ப்பு ஆய்வு அடிப்படையில் நாட்டில்வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.அமைப்பு சாரா துறைகளில் உள்ள தொழி லாளர்களின் நலனில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது. தொழிலாளர்களின் தொடர் உடல்நலப் பரிசோதனைக்காக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுடன் இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள் ஒருங் கிணைக்கப்படும். மொத்தம் 15 நகரங்களில் பரிசோதனை முறையில் … Read more

ஐபிஎல் ஏலம் விஷயத்தில் பிரீத்தி ஜிந்தா முடிவால் அதிர்ச்சி

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 15வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் நடைபெறுகிறது. முதல் நாளான நேற்று 97 வீரர்கள் ஏலம் விடப்பட்டனர். குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர்ஜயன்ட்ஸ் என புதிதாக இரு அணிகள் இணைந்திருக்கும் நிலையில், மொத்தம் 10 அணிகள் ஏலத்தில் இருந்தன. அவற்றை ஏலத்தில் எடுப்பதற்காக மொத்தமாக 590 வீரர்கள் களம் கண்டனர். அவர்களில் 227 பேர் வெளிநாட்டு வீரர்கள். அனைத்து அணி உரிமையாளர்களும் பங்கேற்று வீரர்களை ஏலத்தில் எடுக்க உள்ளனர்.அவர்களில் … Read more

ரயிலுக்கு அடியில் மாட்டிக் கொண்ட பெண் – உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய இளைஞர்

மத்திய பிரதேசத்தில் ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட பெண்ணை தனது உயிரை பணயம் வைத்து இளைஞர் ஒருவர் காப்பாற்றியுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஒரு ரயில் நிலையத்துக்கு இன்று காலை வந்த இருவர், அங்குள்ள தண்டவாளத்தில் நின்றுக் கொண்டிருந்த சரக்கு ரயிலுக்கு அடியில் புகுந்து மறுபுறம் செல்ல முயன்றனர். இதில் அந்த நபர் தண்டவாளத்தை கடந்து விட்ட நிலையில், அவரை பின்தொடர்ந்து சென்ற பெண் சிக்கிக்கொண்டார். भोपाल के बरखेड़ी फाटक में मालगाड़ी … Read more

உ.பி.யின் 55 தொகுதிகளில் வெற்றிக்கு வித்திடும் முஸ்லிம்கள்: வாக்குகள் பிரிவதால் பலனடையும் பாஜக!

புதுடெல்லி: உத்தரப் பிரதேச சட்டப் பேரவைக்கான இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் முடிவடைகிறது. இம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 55 இடங்களில் நாளை மறுநாள் (திங்கள்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த 55 தொகுதிகளின் கள அரசியல் நிலவரம் குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம். உத்தரப் பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் ஒன்பது மாவட்டங்களில் நடைபெறும் இந்தத் தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகள் அதிகமாக உள்ளன. இதன் அடுத்த எண்ணிக்கையில் ஜாட் சமூகத்தினர் உள்ளனர். இதனால், பாஜக தன் … Read more

அம்மாடியோவ்… ஒரு மாம்பழ பெட்டியின் விலை இவ்வளவு ஆயிரமா?-கெத்துக்காட்டிய வியாபாரிகள்!

நாடு முழுவதும் தற்போது மாம்பழ சீசன் தொடங்கி உள்ளது. சீசன் தொடக்கத்தில் சந்தைக்கு வரும் முதல் பெட்டியை ஏலம் எடுத்தால், வியாபாரம் அமோகமாக நடைபெற்று செல்வம் கொழிக்கும் என்ற நம்பிக்கை புனே நகர வியாபாரிகள் மத்தியில் ஆண்டாண்டு காலமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், ரத்னகிரியில் விளைந்த இந்த சீசனின் முதல் அல்போன்சா வகை மாம்பழ பெட்டி புனே சந்தைக்கு விற்பனைக்கு வந்தது. இதனை வாங்க வியாபாரிகள் மத்தியில் கடும் போட்டி நிலவியது. 5000 ரூபாய்க்கு ஆரம்பித்த … Read more

போதைப்பொருள் தடுப்புப் பிரிவால் பறிமுதல் செய்யப்பட்ட 200 டன் கஞ்சா தீவைத்து எரித்து அழிப்பு.! <!– போதைப்பொருள் தடுப்புப் பிரிவால் பறிமுதல் செய்யப்பட்ட 200 … –>

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே 200 டன் கஞ்சா போதைப் பொருட்களைக் காவல்துறையினர் தீவைத்து எரித்து அழித்தனர். ஆந்திரம், ஒடிசா மாநில மலைப்பகுதிகளில் சட்டவிரோதமாகக் கஞ்சா பயிரிடப்பட்டு இங்கிருந்து பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவால் பறிமுதல் செய்யப்பட்ட 200 டன் கஞ்சாவை அனகாபள்ளி அருகே கோடூரில் காவல்துறையினர் தீவைத்து எரித்து அழித்தனர். அழிக்கப்பட்ட கஞ்சாவின் சந்தை மதிப்பு 850 கோடி ரூபாய் எனக் கூறப்படுகின்றது. கடந்த ஓராண்டில் 7,552 ஏக்கரில் பயிரிட்டிருந்த … Read more