நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், டி நிறுவனம் மீது 'உபா' சட்டத்தின் கீழ் என்ஐஏ வழக்கு

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது டி-கம்பெனி மீது உபா சட்டம் என்று அழைக்கப்படும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ்என்ஐஏ வழக்கு பதிவு செய் துள்ளது. நிழல் உலக தாதாவும் 1993-ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவருமான தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தானில் இருந்து கொண்டு இந்தியாவுக்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அவரது நிழல் உலக நிறுவனம் டி-கம்பெனி என அழைக்கப்படுகிறது. லஷ்கர்-இ-தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் தாவூத் இப்ராஹிம் … Read more

சென்னை டூ திருப்பதி… போக்குவரத்து நெரிசலுக்கு விரைவில் வரப்போகுது விடியல்!

நாட்டின் சாலை போக்குவரத்தில் நெடுஞ்சாலைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகள் மிகவும் முக்கிய பங்கு பெறுகின்றன. இந்த சாலைகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டே இந்த சாலைகளை விரிவாக்கம் செய்யும் பணிகளை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ( NHAI ) தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதன்படி சென்னை – திருப்பதி இடையிலான, தேசிய நெடுஞ்சாலையில் அதிகரித்து வரும் வாகனங்களின் போக்குவரத்தை கவனத்தி்ல் கொண்டு, இந்த சாலையை, 20 கிலோமீட்டர் … Read more

ராஜஸ்தானில் ராணுவ சீருடையில் வலம் வந்து இந்தியாவின் தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிய உளவாளி கைது.! <!– ராஜஸ்தானில் ராணுவ சீருடையில் வலம் வந்து இந்தியாவின் தகவல்… –>

பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ உளவுத்துறையைச் சேர்ந்த ஒருவர் இந்திய ராணுவ சீருடையில் வலம் வந்து ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்த நிலையில் ராஜஸ்தான் போலீசார் அவரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். சக்திபால் சக் என்ற பெயரிட்ட அந்த நபர் ராஜஸ்தானின் சிறிய டவுண் ஒன்றில் எல்லைப்பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுடன் ராணுவ சீருடையில் சென்று நட்புகொண்டு தகவல்களைப் பெற்று பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்ததாக போலீசார் தெரிவித்தனர். ராணுவ வாகனங்களின் புகைப்படங்கள், ரகசிய ஆவணங்கள் போன்றவை அவருடைய மொபைலில் … Read more

தேசியக் கல்விக் கொள்கை அமலாக்கப்பட வேண்டும் – குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தல்

புதுடெல்லி: மகாராஷ்ட்ரா மாநில கல்வி சங்கத்தின் 160 ஆண்டுகள் வரலாறு குறித்த நூல் வெளியீடு நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பேசியதாவது: இந்த நாடு அறிந்துள்ள வீரமிக்க நாயகர்களின் கதைகளை நாம் நமது குழந்தைகளுக்குக் கற்றுத்தர வேண்டும். நமது புகழ்மிக்க வரலாற்றால் நமது தாழ்வு மனப்பான்மையை வீழ்த்த வேண்டும்.வரலாறு நமக்கு கற்றுத் தருகிறது, அறிவை பிரகாசிக்க வைக்கிறது.  தேசத்தின் போற்றப்படாத நாயகர்களை கவுரவிக்கவும் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை பள்ளிக் குழந்தைகள் அறியப்பட வேண்டும். இந்தியாவின் … Read more

மேகதாது விவகாரம் பற்றி டெல்லியில் கர்நாடகா முதல்வர் அவசர ஆலோசனை

புதுடெல்லி: தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாதுவில் அணை கட்ட முடியாது என ஒன்றிய அரசு கூறியதை தொடர்ந்து, டெல்லியில் சட்ட நிபுணர்களுடன் கர்நாடகா முதல்வர் நேற்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடகா அரசு புதிய அணை கட்ட முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு நடக்கிறது. இந்நிலையில், ‘தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் மேகதாதுவில் அணை கட்ட … Read more

காஷ்மீர் குறித்து ஹூண்டாய் பாகிஸ்தான் சர்ச்சை கருத்து: மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் வருத்தம் தெரிவித்த தென் கொரிய அமைச்சர்

புதுடெல்லி: காஷ்மீர் தொடர்பாக ஹூண்டாய் பாகிஸ்தான் நிறுவனம் வெளியிட்ட பதிவுக்கு, மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் தென்கொரிய வெளியுறவு அமைச்சர் வருத்தம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் பிப்ரவரி 5-ம்தேதி காஷ்மீர் ஒற்றுமை தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, ஹூண்டாய் பாகிஸ்தான் நிறுவனம், ‘காஷ்மீர் சகோதரர்களின் தியாகத்தை நினைவுகூர்வோம். அவர்கள் மேற்கொண்டு வரும் சுதந்திரப் போராட்டத்தில் அவர்களுக்கு ஆதரவாக இருப்போம்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது. இந்தப் பதிவுக்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஹூண்டாய் நிறுவனத்தின் தயாரிப்புகளைப் புறக்கணிக்க … Read more

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – வெளியானது சூப்பர் அறிவிப்பு!

சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என, முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அறிவித்து உள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தில், மொத்தம் உள்ள 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, ஏழு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் வரும் 10 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கடைசி மற்றும் ஏழாவது கட்டத் தேர்தல், மார்ச் மாதம் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஏழு … Read more

கேரளாவில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து.! <!– கேரளாவில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து.! –>

கேரளாவில் பெருந்தொற்று குறைந்து வருவதையடுத்து ஞாயிற்றுக் கிழமைகளில் பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கேரள அரசின் உயர்மட்டக் கூட்டம் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் ஞாயிற்றுக் கிழமைகளில் அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு விலக்கிக் கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 28ம் தேதி பள்ளி, கல்லூரிகள் முழுமையாகச் செயல்படும் என்றும் அதுவரை 50 விழுக்காடு மாணாக்கர்களுடன் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆலுவா சிவராத்திரி, மாரமன் … Read more

ஹிஜாப் விவகாரம் – மாணவர்கள் அமைதி காக்க கர்நாடக உயர்நீதிமன்றம் வேண்டுகோள்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் எனப்படும் தலையை மறைக்கும் வகையில் துணி அணிந்து வந்த  6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.  இதனால், கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு எதிராக, சில மாணவர்கள் காவித் துண்டு அணியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ஹிஜாப் அணியும் மாணவிகளை வகுப்புக்குள் அனுமதித்தால் காவித் துண்டு அணிந்த எங்களையும் அனுமதிக்க … Read more

காஷ்மீர் பற்றி பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஹூண்டாய் சர்ச்சை கருத்து : ஒன்றிய அரசு அதிரடி நடவடிக்கை

புதுடெல்லி: காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த ஹூண்டாய் கார் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. மேலும் தென் கொரிய அரசும் வருத்தம் தெரிவித்துள்ளது. காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தானில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 5ம் தேதி ‘காஷ்மீர் ஒற்றுமை தினம்’ கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பாகிஸ்தானில் உள்ள தென் கொரியாவை சேர்ந்த பிரபல ஹூண்டாய் கார் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ டிவிட்டரில், ‘காஷ்மீர் சகோதரர்களின் தியாகத்தை நினைவு கூர்வோம். அவர்களின் சுதந்திர போராட்டத்தில் ஆதரவாக இருப்போம்’ … Read more