நதிகள் இணைப்பு விவகாரத்தில் கர்நாடகா தனது உரிமையை விட்டுக் கொடுக்காது – பசவராஜ் பொம்மை

புதுடெல்லி: கர்நாடக மாநிலத்தில் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சிக்காலம் அடுத்த ஆண்டு  மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதனால் அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் சட்டசபைக்கு தேர்தல் நடக்கிறது. கர்நாடக மந்திரிசபையை மாற்றிவிட்டு புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்க முதல் மந்திரி பசவராஜ் பொம்மை முடிவு செய்துள்ளார். மந்திரிசபையில் காலியாக உள்ள இடங்களை நிரப்பவேண்டும் என மூத்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் பலர் பசவராஜ் பொம்மைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். இதற்கிடையே, கர்நாடக … Read more

அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தமிழகத்தில் சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான விவகாரத்தில் மாநில அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் அரசாணையின் நிலைப்பாட்டை ஏற்று நடப்பு கல்வியாண்டில் சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ மேற்படிப்புகளில் 50சதவீத இடங்களை அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கலாம் என உயர்நீதிமன்றம் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது. இதை எதிர்த்து உச்ச … Read more

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆதார் எண் கட்டாயமில்லை: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: கரோனா தடுப்பூசியை பொதுமக்கள் செலுத்திக் கொள்ள ஆதார் எண் கட்டாயமில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. கரோனா தடுப்பூசி முகாம்களை தவிர்த்து, கரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வதற்கு முதலில் கோவின் இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்காக கோவின் இணைய தளத்தில் ஆதார் எண் கேட்கப்படும் என்ற விதிமுறை உள்ளது. இந்நிலையில் இந்த விதிமுறையை நீக்கக் கோரி மகாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்த வழக்கறிஞர் சித்தார்த் சங்கர் சர்மா … Read more

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ் – வீட்டு வாடகைப்படி உயர்வு!

அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப் படியை அதிகரித்து மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஆந்திர மாநிலத்தில், முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு, 11வது ஊதியத் திருத்தக் குழு அளித்த பரிந்துரையின் படி, கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது. இதற்கு அம்மாநில அரசு ஊழியர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும், 11வது ஊதிய திருத்தக் குழுவின் பரிந்துரையின் … Read more

உத்தரபிரதேசத்தில் இன்று பிரதமர் மோடி நேரடி தேர்தல் பிரச்சாரம் <!– உத்தரபிரதேசத்தில் இன்று பிரதமர் மோடி நேரடி தேர்தல் பிரச்ச… –>

உத்தரப்பிரதேசம் மாநிலம் பிஜ்னோரில் இன்று காலை 11.30 மணிக்கு பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். பிரதமரின் வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நேரடியாக பிரச்சாரக் களத்தில் இறங்குகிறார். பிரதமருடன், யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரும் மேடையில் பங்கேற்க உள்ளனர். பொதுக் கூட்டங்களுக்கு தேர்தல்ஆணையம் விதித்திருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையடுத்து பிரதமர் மோடியின் பிரச்சாரம் நடைபெற உள்ளது. பிரச்சார அரங்கில் 1000 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மற்றவர்கள் … Read more

மோசமான வானிலை- பிரதமர் மோடியின் உ.பி. பயணம் ரத்து

லக்னோ: 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரபிரதேச மாநிலத்துக்கு வருகிற 10-ந் தேதி முதல் மார்ச் 7-ந் தேதி வரை 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. முதல்கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 தினங்களே இருப்பதால் அரசியல் கட்சிகள் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. உத்தரபிரதேச மாநிலம் பிஜோனுரில் இன்று நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பா.ஜனதா வேட் பாளர்களை ஆதரித்து பிரசாரம் … Read more

கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழா; தமிழக மீனவர்கள் பங்கேற்க நடவடிக்ைக: இலங்கை அமைச்சர் உறுதி

புதுடெல்லி: வரும் மார்ச் மாதம் கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க இந்த ஆண்டு தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசு அனுமதி மறுத்த நிலையில் இலங்கை மீனவர்களை போல தமிழக மீனவர்களும் குறைந்த பட்ச அளவில் பங்கேற்க அனுமதி வழங்கி தரக்கோரி மீனவ சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.  இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடந்த 4ம் தேதி  கடிதம் ஒன்றை எழுதினார். அதில், ‘இலங்கை … Read more

ஜேஎன்யு முதல் பெண் துணைவேந்தரானார் சாந்திஸ்ரீ பண்டிட்: முன்னாள் மாணவிக்கு கவுரவம்

புதுடெல்லி: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் சாந்திஸ்ரீ பண்டிட் முதல் பெண் துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிராவில் உள்ள சாவித்ரிபாய் பூலே பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவி வகித்துவரும் சாந்திஸ்ரீ பண்டிட் தற்போது புதுடெல்லி ஜேஎன்யுவுக்கு துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 59 வயதான சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிட் ஜேஎன்யுவின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு அவர் தனது எம்ஃபில் படிப்பை முடித்து சர்வதேச உறவுகளில் (International Relations) ஆய்வு செய்து … Read more

படிப்பா முக்கியம்.. "காவி"க்கு எதிராக களம் குதித்த "நீலம்".. கலர் கலராக போராடும் மாணவர்கள்!

கர்நாடக கல்லூரி மாணவர்கள் படிப்பைத் தூக்கி 2வது இடத்தில் வைத்து விட்டார்கள் என்று தோன்றுகிறது. ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு எதிராக காவி அணிந்து போராடும் இந்து மாணவர்களுக்கு எதிராக நீலத் துண்டு அணிந்து தலித் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். கர்நாடக கல்வி நிறுவனங்களில் மத ரீதியிலான போராட்டங்கள் வெடித்துள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. உடுப்பியைச் சேர்ந்த பைந்தூர் அரசு பியூசி கல்லூரியில் படித்து வரும் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் எனப்படும் பர்தா அணிந்து … Read more

குண்டு துளைக்காத கார், Z பிரிவு பாதுகாப்பு வழங்க முன்வந்தும் ஏற்க ஓவைசி மறுப்பு – அமித்ஷா தகவல் <!– குண்டு துளைக்காத கார், Z பிரிவு பாதுகாப்பு வழங்க முன்வந்த… –>

ஐதராபாத் நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஓவைசிக்குக் குண்டு துளைக்காத காரும், இசட் பிரிவு பாதுகாப்பும் வழங்க அரசு முன்வந்தும் அவர் ஏற்க மறுத்துவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஓவைசியின் கார் மீதான துப்பாக்கிச் சூடு தொடர்பாக மாநிலங்களவையில் விளக்கம் அளித்த அமித் ஷா, தனது பயணம் பற்றி மாவட்ட நிர்வாகத்துக்கு ஓவைசி முன்கூட்டித் தெரிவிக்கவில்லை எனக் குறிப்பிட்டார். துப்பாக்கிச் சூடு தொடர்பாக இருவரைக் கைது செய்து 2 கைத்துப்பாக்கிகள், ஒரு கார் ஆகியவற்றைப் … Read more