ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்த மும்பை வீராங்கனை- வீடியோ

நேற்று நடந்த பெண்கள் பிரீமியர் லீக் எலிமினேட்டர் போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை அணி 182 ரன்கள் குவித்தது. இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் யுபி வாரியர்ஸ் அணி களமிறங்கியது. 17.4 ஓவரில் 110 ரன்களுக்கு யுபி வாரியர்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 72 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றதுடன், இறுதிப்போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக விளையாடவுள்ளது. தொடக்கத்தில் மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்து … Read more

76 ரன்னுக்கு ஆல்அவுட்! மோசமான சாதனையில் கென்யாவோடு இணைந்த இலங்கை அணி

ஆக்லாந்து, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது. இதில் முதலாவது ஆட்டம் ஆக்லாந்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 274 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 76 ரன்னில் சுருண்டது. … Read more

பெண்கள் பிரீமியர் லீக் இறுதிப்போட்டி : டெல்லி – மும்பை அணிகள் மோதல்

மும்பை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) ஐ.பி.எல். போட்டியை போலவே பெண்களுக்கான பிரீமியர் லீக் போட்டி அறிமுகம் செய்தது. முதலாவது பெண்கள் பிரீமியர் லீக் 20 ஓவர் போட்டி மும்பையில் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயின்ட்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, உ.பி. வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதின. கடந்த 21-ந் தேதியுடன் லீக் … Read more

சென்னை: மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு; கிரிக்கெட் பயிற்சி அளிக்கும் அஸ்வின்

சென்னை இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி வீரராக விளையாடி வருபவர் தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின். கடந்த 2010ம் ஆண்டில் இந்திய அணிக்காக அறிமுகமான இவர், இதுவரை 92 டெஸ்ட், 113 ஒருநாள், 65 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடிய 692 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிவேக 500 விக்கெட்டை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். 36 வயதான அஸ்வின் சுழலில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் சிறந்த வீரராக உள்ளார். சர்வதேச டெஸ்ட் … Read more

சி.எஸ்.கே. அணியுடன் இணைந்த ஜடேஜா… சென்னை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள வீடியோ

சென்னை, ஐபிஎல் தொடருக்கு இன்னும் 7 நாட்களே உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்திற்கு திரும்பி உள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்து உள்ளனர். அனைத்து வீரர்களும் அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியா – ஆஸ்திரேலியா தொடர் முடிவடைந்த நிலையில் அந்த அணியில் இடம் பெற்றிருந்த ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடன் இணைந்து பயிற்சியை தொடங்கினார். ஜடேஜா சி.எஸ்.கே. அணியுடன் இணைந்ததாக, அணி நிர்வாகம் வீடியோவை … Read more

இவன் எம்ஜிஆரு பேரன்தான் டா…! சென்னைக்கு மாஸ் என்ட்ரி கொடுத்த பென் ஸ்டோக்ஸ்…!

சென்னை ஐபிஎல் தொடருக்கு இன்னும் 7 நாட்களே உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்திற்கு திரும்பி உள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்து உள்ளனர். அனைத்து வீரர்களும் அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியா – ஆஸ்திரேலியா தொடர் முடிவடைந்த நிலையில் அந்த அணியில் இடம் பெற்றிருந்த ஜடேஜா நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடன் இணைந்து பயிற்சியை தொடங்கினார். இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் … Read more

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்: 2வது சுற்றில் பி.வி.சிந்து தோல்வி- தொடரிலிருந்து வெளியேறினார்

சுவிஸ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் பி.சி.சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார். அவர் 2-வது சுற்றில் இந்தோனேசியாவின் புத்ரி குசுமாவர்தானியிடம் 15-21, 21-12, 18-21 என்ற செட் கணக்கில் தோற்றார். ஏற்கனவே இந்தியாவின் ஸ்ரீகாந்த், பிரனாய், மிதுன், மஞ்சுநாத் ஆகியோர் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தோற்றனர். இதன் மூலம் சுவிஸ் ஓபன்பேட்மின்டனில் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது. … Read more

எனக்கு மெல்ல கொல்லும் விஷம் கொடுத்து கொல்ல முயற்சி…! முன்னாள் பாகிஸ்தான் வீரர் அதிரடி குற்றச்சாட்டு

புதுடெல்லி பாகிஸ்தான் கிரிக்கெட்டை பார்த்தால் மேட்ச் பிக்சிங் ஊழல்கள், வருகை தரும் அணி மீது பயங்கரவாத தாக்குதல்கள், வீரர்களுக்கு இடையே சண்டைகள், நேரலை டிவியில் முன்னாள் வீரர்களுக்கு இடையே சண்டைகள், கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மீது புகார், பாலியல் துஷ்பிரயோகம் என நீண்டு கொண்டே போகும். பாகிஸ்தான் 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தோல்வி அடைந்தது. இதில் அந்த அணியின் பயிற்சியாளர் பாப் உல்மர் ஓட்டல் அறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அதன் மர்மங்களே … Read more

சூர்யகுமார் யாதவுக்கு மேலும் வாய்ப்புகள் வழங்க வேண்டும் – இந்திய முன்னாள் வீரர்

மும்பை, இந்திய கிரிக்கெட் அணி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ், 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆனால் ஒருநாள் போட்டியில் அவர் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டியிலும் சூர்யகுமார் யாதவ் ரன் ஏதும் எடுக்காமல் முதல் பந்துகளிலேயே அவுட் ஆனார். இதனால் அவர் கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறார். ஒருநாள் போட்டியில் சூர்யகுமார் யாதவுக்கு பதிலாக சஞ்சு சாம்சனை முயற்சித்து பார்க்க வேண்டும் என்று முன்னாள் வீரர் … Read more

கடைசி ஒருநாள் போட்டியில் தோல்விகான காரணம் என்ன ? ரோகித் சர்மா விளக்கம்

சென்னை, இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று பகல்-இரவு ஆட்டமாக நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, 49 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி, 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 248 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி … Read more