ரயிலில் இருந்து தவறி விழுந்த ராணுவ வீரர் உயிரிழப்பு: கரூரில் சோகம்
கரூர்: கரூர் ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து தவறி விழுந்து ராணுவ வீரர் உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் மாரம்பாடி அருகேயுள்ள பெரியகுளத்துப்பட்டியைச் சேர்ந்தவர் பிச்சைமுத்து பாஸ்கர் (32). இவர் ராணுவ மருத்துவப் பிரிவில் மீரட்டில் பணியாற்றி வந்தார். திருமணமாகி, குழந்தை உள்ளது. ஒரு மாத விடுப்பில் சண்டிகர் மதுரை விரைவு ரயிலில் இன்று (மார்ச் 13) ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். கரூர் ரயில் நிலைய சந்திப்பில் ரயில் காலை 11.35 மணிக்கு நின்ற நிலையில் திண்டுக்கல் ரயில் … Read more