மாணவனுக்கு சாதி சான்றிதழ் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்.!

திருவண்ணாமலை மாவட்டம் : நேற்று, செஞ்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சாதிச் சான்றிதழ் கோரிய மாணவன் வாசன் மற்றும் மாணவி பூஜா ஆகியோருக்கு, இன்று பட்டியல் இன வகுப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று (ஜூலை 8) திருவண்ணாமலை செல்லும் வழியில், செஞ்சியில் முருகன் என்பவரின் மகன் வாசன் மற்றும் மகள் பூஜா ஆகியோர் சந்தித்து, தங்களுக்கு கடந்த ஏழு … Read more

புதுச்சேரி பல்கலை. துணைவேந்தருக்கு கூடுதல் பொறுப்பு: காந்திகிராம பல்கலை. துணைவேந்தராக நியமனம்

திண்டுக்கல்: புதுச்சேரி பல்கலை துணைவேந்தர் குர்மித்சிங்குக்கு, காந்திகிராம பல்கலை துணைவேந்தராக கூடுதல் பொறுப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்தில் உள்ள காந்திகிராம கிராமிய பல்கலை துணைவேந்தராக பணியில் இருந்த மாதேஸ்வரன் பணி விலக்கியதையடுத்து பொறுப்பு துணைவேந்தராக ரெங்கநாதன் நியமிக்கப்பட்டார். கடந்த ஓராண்டாக இவர் பொறுப்பு துணைவேந்தராக பணிபுரிந்துவந்தநிலையில், திடீரென ரெங்கநாதனை பணி விலகச்செய்துவிட்டு, புதுச்சேரி பல்கலை துணைவேந்தராக உள்ள குர்மித்சிங் கிற்கு கூடுதல் பொறுப்பாக காந்திகிராம பல்கலை துணைவேந்தர் பதவியை வழங்கி மத்திய … Read more

சென்னையில் இந்த பகுதிகளில் இன்று (ஜூலை:9) மின்வெட்டு!

சென்னையின் அடையாறு, தாம்பரம், போரூர், பெரம்பூர், கே.கே.நகர், ஆவடி, அம்பத்தூர், ஐடி காரிடார் ஆகிய பகுதிகளில் பராமரிப்புப் பணிகளுக்காக இன்று மின்சாரம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. பணிகள் முடிந்தால் மதியம் 2 மணிக்குள் விநியோகம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடையாறு: பெசன்ட் நகர் 1 ST மெயின் ரோடு, ஜீவா ரத்தினம்நகர், சாஸ்திரி நகர், பரமேஸ்வரி நகர், பத்மநாபநகர் தாம்பரம்: டிஎன்எஸ்சிபி வெண்பா அவென்யூ, கன்னி கோயில் தெரு, … Read more

'பொன்னியின் செல்வன்' டீசர் வெளியிட்டு விழாவின் அசத்தலான புகைப்படங்கள் வெளியீடு.!

அமரர் கல்கியின் புகழ்பெற்ற, வரலாற்று நாவலான ‘பொன்னியின் செல்வன்’ கதையை மையமாக வைத்து இயக்குநர் மணிரத்னம் படமாக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் நடிகர் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத் குமார், பிரபு, ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ஜெயராம், அஸ்வின், கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.  படத்தின் திரைக்கதையை மணி ரத்னம் – குமரவேல் இருவரும் இணைந்து உருவாக்கியுள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தின் இசையமைப்பாளர் – ஏ.ஆர். ரஹ்மான். வசனம் – … Read more

தென்பெண்ணை ஆற்று நீரை ஏரிகளுக்கு கொண்டு செல்லும் திட்டம் செயல்படுத்தப்படுமா?

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாய்ந்தோடும் தென்பெண்ணை ஆற்று நீரை, ஏரிகளுக்கு கொண்டு செல்லும் திட்டங்களை செயல்படுத்த வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்பெண்ணையாறு, கர்நாடக மாநிலம், நந்திமலையில் உற்பத்தியாகி, தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணை வழியாக கிருஷ்ணகிரி அணைக்கு வந்தடைகிறது. இங்கிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் வழியாகச் சென்று கடலில் கலக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தாலும், தென்பெண்ணை ஆற்று நீர் செல்லும் பகுதிகளில் உள்ள ஏரிகளில் தண்ணீர் … Read more

ஏற்கனவே பட்டது போதாதா… இன்னும் வேணுமா? சீரியல் கலாய் மீம்ஸ்

இல்லத்தரசிகளின முக்கிய பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்று சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள். அனைத்து நிகழ்ச்சிகளும் ஏறக்குறைய ஒரே கான்செப்டில் இருந்தாலும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இதில் கடந்த லாக்டவுன் காலத்தில் இளைஞர்கள் பலரும் சின்னத்திரை நிகழ்ச்சிகளை பார்க்க தொடங்கிவிட்டனர். ஆனால் இந்த நிகழ்ச்சிகள் எதாவது ஒரு தருனத்தில் மக்களின் பொறுமையை ரொம்பவே சோதிக்கும் வகையில் அமைவது உண்டு. ஆனால் இந்த நிகழ்ச்சிகள் தொடர்பாக வரும் மீம்ஸ்கள் ரசிகர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்த எப்போதும் … Read more

போதுங்க, மக்கள் சோர்ந்து போய்ட்டாங்க… பிரதமரின் வார்த்தையை வைத்தே விமர்சித்த ராகுல்காந்தி.!

நாட்டில் எரிபொருள்களின் விலை மற்றும் வேலைவாய்ப்பின்மையை கண்டித்து, பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்து டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  பிரதமர் நரேந்திர மோடி ஆந்திராவின் பீமாவரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திரப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் 30 அடி உயர வெண்கல சிலையை அவரது 125 வது பிறந்த தினத்தை நினைவு கூறும் விதமாக திறந்து வைத்தார். அந்த பொதுக் கூட்டத்தில் நரேந்திர மோடி … Read more

“ஓபிஎஸ் உடன் அரசியல் பயணம் செய்ததை நினைத்து வெட்கப்படுகிறேன்” – கே.பி.முனுசாமி

சென்னை: “ஓபிஎஸ் தூண்டுதலின் பெயரில் கோவை செல்வராஜ் பெட்ரோல் பங்க் குத்தகை குறித்து பேசியிருக்கிறார். எங்களுடைய நற்பெயரை கெடுப்பதற்காக இதுபோல கூறுவது, ஓபிஎஸ் உடன் நீண்டகாலமாக அரசியல் பயணம் மேற்கொண்ட என்னைப் போன்றவர்களுக்கு வேதனையாக இருக்கிறது. ஏன் அவருடன் பயணித்தோம் என்பதை நினைக்கும்போது வெட்கமாகவும் இருக்கிறது” என்று இபிஎஸ் ஆதரவாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இபிஎஸ் இல்லத்தில் அவரது ஆதரவாளர் கே.பி.முனுசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: ” எனது … Read more

நடிகர் தனுஷின் ட்விட்டர் கணக்கில் ப்ளூ டிக் நீக்கம் : காரணம் என்ன?

நடிகர் தனுஷின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து ப்ளு டிக்கை நீங்கியுள்ள ட்விட்டர் நிர்வாகத்தின் செயல் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். துள்ளுவதே இளமை தொடங்கி பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள தனுஷின் சமீபத்தில் படங்கள் கடுமையாக விமர்சனங்களை சநதித்து வருகிறது. அதிலும் தனது அனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக தனுஷ் அறிவித்ததில் இருந்து தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பில் இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு … Read more