வாஷிங் மிஷினின் பின்பக்கத்தில் புகுந்த பாம்பு உயிருடன் பிடிப்பட்டது..!
கடலூர் மாவட்டம் உண்ணாமலை அருகே வாஷிங் மிஷினில் புகுந்த பாம்பு உயிருடன் பிடிபட்டது. செட்டிசாவடியை சேர்ந்த மோகன், என்பவரது வீட்டில் இருந்த வாஷிங்மெஷினில் ஏதோ சத்தம் கேட்டதால் அதனை சாய்த்து பார்த்தபோது அதில் பாம்பு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து பாம்பு பிடிக்கும் ஆர்வலர் செல்லாவிற்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, வாஷிங் மிஷினின் பின்பக்கத்தில் இருந்த பாம்பை லாகவமாக உயிருடன் பிடித்த அவர் பாதுகாப்பாக வனப்பகுதியில் கொண்டு சென்றுவிட்டார். Source link