தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 3-ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் … Read more

கண்ணீர் மல்க வாக்கு சேகரித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்!

வாணாபுரத்தில் அதிமுக வேட்பாளர் குமரகுருவிற்கு ஆதரவாக கண்ணீர் மல்க வாக்கு சேகரித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வீடியோ வைரல் ஆகி வருகிறது.   

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இயக்குநர் அமீருக்கு சம்மன்: டெல்லியில் நாளை ஆஜராக உத்தரவு

சென்னை: டெல்லியில் உள்ள போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நாளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு, ஜாபர் சாதிக்கின் நண்பரும், திரைப்பட இயக்குநருமான அமீருக்கு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில், இந்தியாவில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தி ரூ.2,000 கோடி வரை வருமானம் ஈட்டியது தொடர்பான வழக்கில் தமிழகத்தை சேர்ந்த 3 பேரை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் டெல்லியில் … Read more

“எனக்கு சீட் கிட்டாமல் போக முயன்றவர்களுக்கு நன்றி” – காங். எம்.பி. திருநாவுக்கரசர்

சென்னை: “இத்தேர்தலில் நான் மீண்டும் போட்டியிட விரும்பியவர்கள், என் வாய்ப்புக்காக உதவிட முயன்றவர்கள், நாடாளுமன்ற உறுப்பினராக நான் தொடரக் கூடாதென இத்தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிட்டாமல் போக முயன்றவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி”, என்று காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் கூறியுள்ளாா். 2024 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில், கடந்தமுறை திருச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருநாவுக்கரசருக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில், திருநாவுக்கரசர் திருச்சி மக்களவைத் … Read more

“தமிழகத்தில் பாஜகவை அடையாளம் காட்டியதே அதிமுக தான்” – ராம சீனிவாசனுக்கு இபிஎஸ் பதிலடி

கடலூர்: “தமிழகத்தில் 1998 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை அடையாளம் காட்டியவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. எங்களைப் பார்த்தா கட்சி இருக்காது என்று கூறுகிறீர்கள்” என்று மதுரை பாஜக வேட்பாளர் ராம சீனிவாசனுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது: “தமிழக … Read more

“என்னை பார்க்க வரும் கூட்டத்தை வாக்குகளாக மாற்ற வேண்டும்” – நிர்வாகிகளுக்கு ராதிகா அறிவுறுத்தல்

சிவகாசி: “நடிகர்கள் என்ற முறையில் என்னையும் சரத்குமாரையும் பார்க்க வரும் கூட்டத்தை வாக்குகளாக மாற்ற வேண்டியது உங்கள் பொறுப்பு” என சிவகாசியில் நடந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் ராதிகா பேசினார். சிவகாசி அருகே திருத்தங்கல் தனியார் மண்டபத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் விருதுநகர் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா, அவரது கணவர் சரத்குமார் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்தில் வேட்பாளர் ராதிகா பேசியது: “அரசியல் எனக்கு புதிதல்ல. … Read more

‘தேர்தலுக்காக கச்சத்தீவு குறித்து பிரதமர் மோடி பேசுகிறார்’ – சீமான் @ மதுரை

மதுரை: தேர்தலுக்காக கச்சத்தீவு பிரச்சினையை பற்றி பிரதமர் மோடி பேசுகிறார் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். மதுரை கோ.புதூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நாம் தமிழர் கட்சியின் மதுரை வேட்பாளர் சத்யாதேவிக்கு ஆதரித்து தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது.. “நாம் தமிழர் கட்சி பதவிக்கானது அல்ல மக்களின் உதவிக்கானது. கட்சியை வைத்து பிழைக்க வந்தவர்கள் அல்ல, மக்களுக்காக உழைக்க வந்தவர்கள். ஒரேயாருமுறை எங்களை நம்பி வாக்களியுங்கள். வளர்ச்சியை தருகிறோம். … Read more

“செயல்வீரர் செந்தில் பாலாஜியை சிறையில் அடைத்தது பாஜக சதி” – முதல்வர் ஸ்டாலின் ஆவேசம் @ ஈரோடு

ஈரோடு: “பிரதமர் மோடி, தேர்தல் நெருங்க நெருங்க, தோல்வி பயத்தில் செய்யக் கூடாததை எல்லாம் செய்கிறார். ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை கைது செய்திருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் வெளியிலிருந்து வலிமையாகத் தேர்தல் பணியாற்றுவார்கள் என்று பயந்து நடுங்கிக் கைது செய்திருக்கிறார்கள். இங்கு தமிழகத்திலும் மேற்கு மண்டலத்தின் வலிமையான செயல்வீரர் செந்தில் பாலாஜியையும் இதே மாதிரிதான் சிறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள். ஜாமீன் கூட கொடுக்காமல் பல மாதங்களாக அவரை சிறையில் வைத்திருக்கிறார்கள்” என்று … Read more

விஸ்வரூபம் எடுக்கும் கச்சத்தீவு மேட்டர்… மோடி போட்ட தேர்தல் வியூகம் – திமுகவின் பதில் என்ன?

Katchatheevu Issue: கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்ததில் புதிய உண்மைகள் வெளியாகி இருப்பதாக பிரதமர் மோடி ட்வீட்டில் தெரிவித்திருந்த நிலையில், காங்கிரஸ் மற்றும் திமுக தரப்பில் அதற்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. 

“பாஜகவை வீட்டுக்கு அனுப்பும் வரை தூங்க மாட்டோம்” – அமைச்சர் உதயநிதி @ புதுச்சேரி

புதுச்சேரி: “பிரதமர் மோடி திமுகவினருக்கும், முதல்வருக்கும் தூக்கம் போய்விட்டது என்று சொல்கிறார். பாஜகவை ஜூன் 4-ம் தேதி வீட்டுக்கு அனுப்பும் வரை திமுகவினரும், கூட்டணி கட்சியினரும் தூங்க மாட்டோம்” என்று புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார். புதுச்சேரி மக்களவை தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்த வேனில் வில்லியனூர், மரப்பாலம், அண்ணா சிலை ஆகிய இடங்களில் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வில்லியனூர், மரப்பாலம் … Read more