கொங்கு மண்டலம் அதிமுக -வின் கோட்டை! ஓ. பன்னீர்செல்வம் பேச்சு.!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டத்தில் அதிமுக சார்பில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிவானந்தா காலனியில் நடைபெற்ற கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ‘அதிமுக தொடங்கப்பட்ட காலம் முதல் அதாவது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலம் முதல் தற்போது வரை கொங்கு மண்டலம் அதிமுகவின் எஃகு கோட்டையாக இருந்து வருகின்றது என்றார். 2011 ஆம் … Read more

சூடுப்பிடிக்கும் தேர்தல் களம்.. வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு..! <!– சூடுப்பிடிக்கும் தேர்தல் களம்.. வேட்பாளர்கள் தீவிர வாக்கு… –>

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி, திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மாநகராட்சியின் வளசரவாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட வார்டுகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பிரச்சாரம் மேற்கொண்டார். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 119வது வார்டில் போட்டியிடும் திமுக பெண் வேட்பாளர் பேண்டு வாத்தியங்களுடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 8-வது … Read more

'என் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை' – தஞ்சையில் பிரச்சாம் செய்த உதயநிதியிடம் முறையிட்ட பெண்

தஞ்சாவூர்: “பாசிச பாஜக, அடிமை அதிமுகவுக்கு எதிராக சிம்மசொப்பனமாக திமுக திகழ்கிறது” என்று தஞ்சாவூரில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுக இளைஞரணிச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பேசினார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தஞ்சாவூர் கல்லுக்குளத்தில் இன்று காலை தேர்தல் பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலின் பேசியது: ”திமுக ஆட்சிக்கு வந்து 8 மாதங்களில் ஏராளமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில், முக்கியமான வாக்குறுதிகளான கரோனா கால நிவாரணம் ரூ. 4 ஆயிரம், அரசு நகரப் … Read more

பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: என்.ஐ.ஏ விசாரிக்க வேண்டும் – அண்ணாமலை

பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வியாழக்கிழமை கோரிக்கை விடுத்தார். பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது தமிழக பாஜக தலைவர் அண்ணமலை கூறியதாவது: “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு யாருக்கெல்லாம் வாழ்வு கிடைத்திருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால், தமிழககத்தில் இருக்கிற ரவுடிகளுக்கு … Read more

ஹிஜாப் உடை பிரச்சனை: வலுவான கண்டன இயக்கம் நடத்திட கட்சி அணிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறைகூவல்.!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், “கர்நாடக மாநிலத்தில் சில கல்வி நிலையங்களில் இஸ்லாமிய மாணவிகள் `ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிராக, பாஜக மற்றும் அதன் துணை அமைப்புகள் வெறியூட்டும் பேச்சுகளையும், வன்முறையையும் ஏவி விட்டு கொண்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.  மிக நீண்டகாலமாக `ஹிஜாப்’ அணிந்து கல்வி நிலையங்களுக்கு வருவது நடைமுறையில் உள்ளது. அவரவர் விரும்புகிற மதத்தை பின்பற்றுவது அரசியல் சாசனம் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும்.  இதற்கு மாறாக … Read more

பிப்ரவரி 26ஆம் நாள் 6, 7, 8ம் வகுப்பு மாணவர்களுக்குப் புத்தகப் பை இல்லாத நாள் கடைப்பிடிப்பு <!– பிப்ரவரி 26ஆம் நாள் 6, 7, 8ம் வகுப்பு மாணவர்களுக்குப் புத… –>

பிப்ரவரி 26 – புத்தகப் பை இல்லாத நாள் 6, 7, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புத்தகப் பை இல்லாத நாள் கடைப்பிடிப்பு பிப்ரவரி 26ஆம் நாள் புத்தகப் பை இல்லாத நாளாகக் கடைப்பிடிக்கப்படும் – பள்ளிக்கல்வித்துறை புத்தகங்கள் எடுத்துச் செல்லாமல் அனுபவம் மூலம் வாழ்க்கைக் கல்வி பயிலும் திட்டம் மாடித்தோட்டம், மூலிகைத் தாவர வளர்ப்பு, பாரம்பரியக் கலைகள் பற்றிப் பயிற்சியளிக்க நடவடிக்கை மாணவர்களுக்குச் சிற்றுண்டி, பரிசுப்பொருட்கள் வழங்க 1.2 கோடி ரூபாய் ஒதுக்கியது பள்ளிக்கல்வித்துறை Source … Read more

பிரதமர் மோடியின் உரையை தமிழக கோயில்களில் ஒளிபரப்பியதில் விதிமீறல் இல்லை: உயர் நீதிமன்றம்

சென்னை: ஆதிசங்கரர் சிலை திறப்பு விழா நிகழ்வில் பேசிய பிரதமர் மோடியின் உரையை தமிழக கோயில்களில் ஒளிபரப்பியதில் விதிமீறல் இல்லை என கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்த மனுவில், ’பிரதமர் மோடி கேதர்நாத் கோயிலில் நடத்திய ஆதிசங்கரர் பூஜை, தமிழகத்தில் உள்ள 16 கோயில்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதற்காக கோயில் நிதி … Read more

பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு… கைதான நபரின் பரபரப்பு வாக்குமூலம்

சென்னை தி.நகரில் உள்ள பாஜக கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு, அதிகாலை 1.20 மணியளவில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் , பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களை கொளுத்தி வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இந்த தாக்குதலில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தினர். மேலும், அங்கிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதற்கிடையில், அப்பகுதியில் அதிகளவில் திரண்ட பாஜகவினர், குண்டு வீசிய நபரை உடனடியாக … Read more

#BREAKING || நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – காஞ்சியின் 36 வார்டில் தேர்தல் ஒத்திவைப்பு.!

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் ஜானகிராமன். 37 வயதாகும் இவர், அந்த பகுதியில் அதிமுகவின் தீவிர ஆதரவாளராகவும், அதிமுக பிரமுகரும் இருந்து வருகிறார். வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், காஞ்சிபுரம் மாநகராட்சி 36-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு, அதிமுக வேட்பாளராக களமிறங்கி, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இந்த நிலையில், இன்று அதிகாலை திடீரென ஜானகிராமன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  இதுகுறித்து தகவல் அறிந்த காஞ்சிபுரம் போலீசார், அவரின் … Read more

இன்று தென் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் <!– இன்று தென் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் –>

குமரிக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சியின் காரணமாக இன்று தென் தமிழகக் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. பிப்ரவரி 12 அன்று தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தேனி, திண்டுக்கல், … Read more