Tamil News Today Highlights: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்; வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளுக்கு 19-ம் தேதி பொதுவிடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு

Tamil Nadu News Today Highlights: Petrol and Diesel Price: சென்னையில் தொடர்ந்து 97-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.101. 40 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 91.43 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. Tamilnadu News Update: பத்திரப்பதிவுத்துறை சுற்றறிக்கை! தமிழ்நாட்டில் நீர் நிலைகள், நீர்வழிப் பாதைகள், நீர்ப்பிடிப்பு பகுதிகள் என வகைப்படுத்தப்பட்ட நிலங்களை ஆவணப்பதிவு செய்ய தடை விதித்து’ அனைத்து … Read more

பிப்ரவரி 19 ஆம் தேதி பொது விடுமுறை, தமிழக அரசு அறிவிப்பு.!

உள்ளாட்சித்தேர்தல் நடைபெறுவதை ஒட்டி வரும் 19 ஆம் தேதி பொது விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரும் 19 ம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை அடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குபதிவு நடைபெறும் பகுதிகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அடுத்து வாக்குப்பதிவு நாளான வரும் 19 ஆம் தேதியன்று மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சி பகுதிகளில் அரசு … Read more

பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் ; ஆசிரியர்களின் அலட்சியமே காரணம் என உறவினர்கள் சாலை மறியல் <!– பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் ; ஆசிரியர்களின் அலட்சியமே … –>

புதுக்கோட்டை அருகே பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவத்தில் ஆசிரியர்கள் அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறி, பெற்றோர் மற்றும் உறவினர் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பாப்பான் விடுதி அரசுப் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வந்த மாணவர் ஒருவர், செவ்வாய்கிழமை மதியம் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், பெற்றோர் இல்லாத நேரம் வீட்டில் கொண்டு வந்து ஆசிரியர்கள் விட்டுச் சென்றனர் என்று கூறப்படும் நிலையில், மருத்துவமனை செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். ஆசிரியர்களின் அலட்சியமான செயல்பாடே … Read more

"நாங்கள் மதம், சாதியை வைத்து அரசியல் செய்யவில்லை" – தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேச்சு

“ஆட்சிக்கு வந்த பிறகு மக்கள் பணி ஒன்றையே நோக்கமாகக் கொண்டு நாங்கள் செயல்பட்டு வருகிறோம். மதத்தை வைத்தோ, சாதியை வைத்தோ அரசியல் செய்யவில்லை” என்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் உரையாற்றினார். அரசின் திட்டங்களை அடுக்கிய அவர், “இந்த ஆட்சி மலர்ந்த இந்த … Read more

தமிழில் எழுப்பிய கேள்விக்கு ஹிந்தியில் பதில் அளித்த அமைச்சர்; தமிழக எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு

Tamilnadu MPs oppose minister’s reply in hindhi: மக்களவையில் மதிமுக உறுப்பினர் கணேச மூர்த்தி தமிழில் எழுப்பிய கேள்விக்கு, மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இந்தியில் பதில் அளித்ததற்கு தமிழகத்தைச் சேர்ந்த மக்களைவை உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத்தில் அமைச்சர்கள் பதில் அளிக்கும்போது, அனைவருக்கும் தெரிந்த மொழியில் பேச வேண்டும் என்ற வேண்டுகோள், பல காலமாக பிற மொழி பேசும் மாநில உறுப்பினர்களால் வைக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பெரும்பாலான அமைச்சர்கள் ஹிந்தியிலே பதில் அளித்து … Read more

என் மனைவிக்கு ஒழுங்கா ஓட்டு போடு., கத்தியை காட்டி மிரட்டிய காங்கிரஸ் நகர எஸ்.சி. எஸ்.டி. துணைத்தலைவர்.!

நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளன.  வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட நிலையில், தற்போது வேட்பாளர்களும், அரசியல் கட்சி நிர்வாகிகளும், அமைச்சர்களும், கட்சித் தலைவர்களும் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர். இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ராமாபுரம் பகுதியை சேர்ந்த பூபாலன் (42வயது) மனைவி தனலட்சுமி, ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி 1-வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட களம் … Read more

பெற்றோரை தற்கொலைக்குத் தூண்டியதாக மகன் மீது வழக்குப்பதிவு <!– பெற்றோரை தற்கொலைக்குத் தூண்டியதாக மகன் மீது வழக்குப்பதிவு –>

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பெற்றோரை தற்கொலைக்குத் தூண்டியதாக மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சியோன்புரத்தைச் சேர்ந்த செல்வ ஜெயசிங் – தங்கம் தம்பதி, கடந்த திங்கட்கிழமை இரவு தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டனர். சம்பவத்தன்று செல்வ ஜெயசிங் தனது தம்பிக்கு போன் செய்து, “மகன்கள் தங்களை சரிவர கவனிக்கவில்லை, எனவே தாங்கள் தற்கொலை செய்துகொள்ளப் போகிறோம்” எனக் கூறியது விசாரணையில் தெரியவந்தது. தம்பதியின் இளைய மகன் ஏசு ஜெபினை பிடித்து விசாரிக்கையில், தனக்கு திருமணம் செய்துவைக்கக் கேட்டு, … Read more

ஸ்டாலினும் உதயநிதியும் நகைக்கடன் வாக்குறுதியால் மக்களை கடனாளியாக்கினர்: இபிஎஸ் பேச்சு

“மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஆகியோர் கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி செய்வோம் என பொய்யான வாக்குறுதி அளித்து மக்களை கடனாளியாக்கினர்” என்று தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சாடினார். மேலும், “அரசு அதிகாரிகள், காவல் துறையினர் திமுகவுக்கு சாதகமாக செயல்படுகின்றனர். இதை திருத்திக்கொள்ளாவிட்டால் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த உடன் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நிச்சயம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் எச்சரித்தார். வேலூர் மாநகராட்சி மற்றும் திருவலம் … Read more

திமுக அரசின் சாதனைகளை பழனிசாமி, பன்னீர்செல்வம் கும்பலால் தாங்க முடியவில்லை – ஸ்டாலின்

CM Stalin Tuticorin election campaign speech highlights: திமுக அரசின் சாதனைகளை பழனிசாமி, பன்னீர்செல்வம் கும்பலால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் திமுக கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை என்று பொய் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின், திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் இன்று தூத்துக்குடி மாவட்ட திமுக வேட்பாளர்களை ஆதரித்து, பிரச்சாரம் … Read more

#BigBreaking || தொடரை கைப்பற்றி இந்திய அணி அபார வெற்றி.! பிரசித் கிருஷ்ணா அசத்தல் பந்து வீச்சு.!

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் நடந்து கொண்டிருக்கிறது. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று முன்னிலை பெற்றுள்ள நிலையில், இன்று இரண்டாவது ஆட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 5 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுக்க, நிதானமாக  ஆடிய … Read more