சீனாவின் மாஜி அதிபர் ஜியாங் ஜமீன் மரணம்| Dinamalar

பீஜிங், சீனாவின் முன்னாள் அதிபர் ஜியாங் ஜமீன், 96, நேற்று காலமானார். ஷாங்காய் நகரில் சோப்புத் தொழிற்சாலை மேலாளராக இருந்த ஜியாங், கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து, அதில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராக 1989 – 2004 வரை பதவி வகித்த ஜியாங், 1993 – 2003 வரை சீன அதிபர் பதவியையும் வகித்தார். சீனாவின் தியனன்மென் சதுக்கத்தில், 1989ல் நடந்த மிகப்பெரிய போராட்டம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. இந்தப் … Read more

ஜப்பான் நாட்டில் வசிக்கும் சீன தொழிலதிபர் ஜாக் மா| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி :சீனாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், பிரபல ‘அலிபாபா’ குழுமத்தின் நிறுவனருமான ஜாக் மா, அந்நாட்டு அரசின் கடுமையான நடவடிக்கைகள் காரணமாக, கடந்த 6 மாதங்களாக ஜப்பானில் வசித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.அலிபாபா குழுமம், சீனாவின் மிகப் பெரிய வணிகங்களில் ஒன்றாகும். இதன் நிறுவனர் ஜாக் மா. உலகளவிலான பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் ஜாக் மாவின் சொத்து மதிப்பு, தற்போது 2.52 லட்சம் கோடி ரூபாய்.கடந்த 2020ல், … Read more

இந்திய கடற்படைக்கு சீனா வைத்த ஆப்பு; எச்சரிக்கை மணி அடித்த அமெரிக்கா.!

சீனா தனது விமானம் தாங்கி கப்பல்கள், பெரிய போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை, ஆப்பிரிக்காவின் கொம்பூ என அழைக்கப்படும் ஜிபூட்டியில் உள்ள தனது முதல் வெளிநாட்டு ராணுவ தளத்தில் நிறுத்தலாம், இது இந்திய கடற்படைக்கு மிகுந்த பாதுகாப்பு சிக்கலை ஏற்படுத்தும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பிக்கப்பட்ட சீனா பற்றிய அமெரிக்க பாதுகாப்புத் துறையின் வருடாந்திர அறிக்கையில் இது கூறப்பட்டுள்ளது. இதுவே சீனாவின் சர்வதேச தாக்குதல் படைகளின் முதுகெலும்பாக இருக்கும் என அமெரிக்கா கணித்துள்ளது. மேலும் … Read more

சீனாவில் விநோதம்! சிறுமியின் வயிற்றில் இருந்த 3 கிலோ முடி: அதிர்ச்சி அடைந்த பெற்றோர்

பீஜீங், உலகில் பெரும்பாலான மனிதர்களுக்கு வினோதமான பழக்கங்கள் இருப்பது வழக்கம். இரும்பை திண்பது, பல்பை விழுங்வது, முகத்துக்கு பூசும் பவுடரை டப்பா டப்பாவாக உட்கொள்ளுதல், மண்ணை திண்ணுதல், இதற்கு காரணம் ஒரு பொருள் மீதான ஈர்ப்பே ஆகும். அந்த வகையில், சீனாவை சேர்ந்த சிறுமி ஒருவர் தனது தலைமுடியையே பிடுங்கி சாப்பிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சிறுமி ஒருவரை அவரது தாத்தா மற்றும் பாட்டி ஆகியோர் அழைத்து சென்றுள்ளனர். அவர் உணவு … Read more

போரில் ரஷிய ராணுவ வீரர்களின் மனைவிகள் கற்பழிப்பை ஊக்குவிக்கின்றனர்- உக்ரைன் அதிபர் மனைவி குற்றச்சாட்டு

லண்டன் ரஷிய ராணுவ வீரர்களின் மனைவிகள் உக்ரைன் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய ஊக்குவிப்பதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் மனைவி ஒலேனா ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். ல போரில் நடந்த பாலியல் வன்கொடுமை குறித்த மாநாடு லண்டனில் நடைபெற்றது. இதில் பேசிய உக்ரைனின் முதல் பெண்மணி ஒலேனா ஜெலென்ஸ்கி கூறியதாவது;- ரஷிய படைவீரர்கள் உக்ரைன் நாட்டின் மீது படையெடுப்பதில் “முறைகேடாகவும்,வெளிப்படையாகவும்” கற்பழிப்பை “ஆயுதமாக” பயன்படுத்துகின்றனர். பாலியல் வன்முறை என்பது ஒருவரின் மீது ஆதிக்கத்தை நிரூபிக்க மிகவும் … Read more

9 பேரை மணமுடித்த நபர்… விவாகரத்து கோரும் மனைவி; 10-வது திருமணம் செய்ய விருப்பம்

சாவோ பவ்லோ, நமது நாட்டில் ஆண், பெண் பாலின விகிதம் அதிகரித்து திருமணத்திற்கு துணை கிடைப்பது அரிது என்ற நிலை அதிகரித்து காணப்படுகிறது. ஆனால், பிரேசில் நாட்டில் சாவ் பாவ்லோ நகரில் வசிக்கும் ஆர்தர் ஓ உர்சோ என்பவருக்கு மொத்தம் 9 மனைவிகள் உள்ளனர். முதன்முதலில் லுவானா கஜகி என்பவரை திருமணம் செய்துள்ளார். அதன்பின்பே பலதார உறவுமுறையை தேர்ந்தெடுத்து, 8 பேரை மணமுடித்து உள்ளார். ஒன்றிற்கு மேற்பட்ட மனைவிகள் என்ற தனது முடிவானது அன்பை சுதந்திரமுடன் கொண்டாடுவது … Read more

செக் வைத்த இந்தியா..கடுமையான கோபத்தில் சீனா.!

அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் ராணுவங்களுக்கிடையில் சிறந்த ஒத்துழைப்பு, தந்திரோபாயங்கள், நுட்பங்கள் மற்றும் நடைமுறைகளை பரிமாறிக்கொள்ளும் நோக்கத்துடன் ஆண்டுதோறும் இருநாடுகளுக்கு இடையே ராணுவப் பயிற்சி நடத்தப்படுகிறது. அந்தவகையில் நடப்பு ஆண்டில் இந்தியா-அமெரிக்க கூட்டு ராணுவப் பயிற்சி தற்போது உத்தரகாண்டில், சீன எல்லைக்கு அருகே உண்மையான கட்டுப்பாட்டு பகுதிக்கு அருகில் கடந்த 19ம் தேதி தொடங்கியது. அமைதி காத்தல் மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளில் இரு படைகளுக்கும் இடையே இயங்கும் தன்மையை மேம்படுத்துதல் மற்றும் நிபுணத்துவத்தை … Read more

இந்தியாவுடனான உறவில் தலையிட வேண்டாமாம்: அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: இந்தியா – சீனா இடையிலான உறவில் அமெரிக்கா தலையிட வேண்டாம் என சீனா எச்சரித்துள்ளது. இதனை, அமெரிக்க பார்லிமென்டில், பெண்டகன் அமைப்பு தாக்கல் செய்த அறிக்கையில் கூறியுள்ளது. அந்த அறிக்கையில் கூறியதாவது: அமெரிக்கா உடனான நட்பில் இந்தியா இன்னும் நெருக்கம் காட்டி விடக்கூடாது என்பதற்காக, அந்நாட்டுடனான எல்லையில் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்கும் பணியில் ஈடுபட்டது. இந்தியாவுடனான தங்களது நட்பில் தலையிட கூடாது என அமெரிக்காவிற்கு சீன ராணுவம் எச்சரிக்கை … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 62.52 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64 கோடியே 68 லட்சத்து 71 ஆயிரத்து 312 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே … Read more

சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டம் கட்டுக்குள் வந்தது

பீஜிங், சீனாவில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக அங்கு கொரோனா கட்டுப்பாடுகளை அரசு தீவிரமாக்கியது. தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதற்கு தடைவிதிக்கப்பட்டது. இது தவிர பணியிடங்கள் கட்டுப்பாடு, பொருட்களை வாங்குவதில் கட்டுப்பாடு என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த நாட்டு மக்கள் கடும் அதிருப்தியில் இருந்து … Read more