ஆஸி. பெண் கொலையில் தேடப்பட்டவர் டெல்லியில் கைது

புதுடெல்லி: ஆஸ்திரேலிய பெண் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர் டெல்லியில் அண்மையில் கைது செய்யப்பட்டார். இவரைப் பற்றி தகவல் தருவோருக்கு ரூ.5.17 கோடி பரிசு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 2018-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தைச் சேர்ந்த 24 வயதான தோயா கார்டிங்லி என்ற பெண்ணை, இந்தியாவைச் சேர்ந்த ரஜ்விந்தர் சிங் (38) கொலை செய்தார். ரஜ்விந்தர் சிங், குயின்ஸ்லாந்தில் நர்ஸாக வேலை பார்த்து வந்தார். கொலைக்குப் பிறகு ரஜ்விந்தர் சிங், தனது மனைவி, குழந்தைகளை … Read more

பிரபல ஓவியரை கொலை செய்த 49 பேருக்கு துாக்கு தண்டனை| Dinamalar

அல்ஜியர்ஸ், அல்ஜீரியாவில் ஓவியரை அடித்துக் கொன்று தீயிட்டு எரித்த 49 பேருக்கு தூக்கு தண்டனையும், 38 பேருக்கு இரண்டு ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. வடக்கு ஆப்ரிக்க நாடான அல்ஜீரியாவின் பிரபல ஓவியரான பென் இஸ்மாயில் சமூக சேவைகளிலும் ஆர்வமுடன் ஈடுபட்டு வந்தார். இந்நாட்டின் வடகிழக்கில் அமைந்துள்ள கபைலி என்ற இடத்தில் கடந்த ஆண்டு காட்டுத்தீ பரவியது. அதை அறிந்து அங்கு சென்ற பென் இஸ்மாயில் அதில் சிக்கிக் கொண்டவர்களை காப்பாற்றும் … Read more

நேபாளம் தேர்தல் நிலவரம் : மீண்டும் ஷேர் பகதூர் துபா ஆட்சி

காத்மாண்டு : நேபாளத்தில் நடைபெற்ற பார்லிமென்ட் தேர்தலில் ஆளும் நேபாள காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்க வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நம் அண்டை நாடான நேபாளத்தில் 275 எம்.பி.,க்களைக் கொண்ட பார்லி., மற்றும் 550 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்ட ஏழு மாகாண சட்டசபைக்கு கடந்த 20-ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் 165 எம்.பி.க்களை தவிர விகிதாச்சார முறைப்படி 110 எம்.பி.க்களுக்கான தேர்தல் நடந்தது. அதே நேரம் 550 சட்டசபை உறுப்பினர்களில் 330 உறுப்பினர்களை தவிர … Read more

சீனாவில் குடியிருப்பில் தீ விபத்து 10 பேர் பலி; 9 பேர் படுகாயம்| Dinamalar

பீஜிங், சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், 10 பேர் பலியாகினர்; ஒன்பது பேர் படுகாயம் அடைந்தனர். நம் அண்டை நாடான சீனாவில், ஜின்ஜியாங் மாகாணத்தின் தியான்ஷன் மாவட்டத்திலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், நேற்று முன்தினம் இரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில், 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர்; ஒன்பது பேர் படுகாயங்களுடன் … Read more

சந்தேகத்தால் வந்த வினை ஒரு கொலை….! 49 பேர்களுக்கு மரண தண்டனை…!

அல்ஜீரியாவில் காட்டுத்தீயை ஏற்படுத்தியதாக கூறி ஒருவரை பொதுமக்கள் கூட்டமாக அடித்து கொன்றனர். இந்த வழக்கில் 49 பேர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அல்ஜீரியாவில் 2021 ஆகஸ்டு மாதம் காட்டுத்தீ வேகமாக பரவியது.அந்த காட்டுத்தீயில் சுமார் 90 பேர்கள் மரணமடைந்திருந்தனர். இதற்கு ஜமீல் பின் இஸ்மாயில்(38) தான் காரணம் என கிராம மக்கள் சந்தேகம் அடைந்து உள்ளனர். இதை அறிந்த இஸ்மாயில் போலீசாரின் உதவியை நாடியுள்ளார். அங்கு வந்த போலீசார் ஜமீல் பின் இஸ்மாயிலை வாகனத்தில் ஏற்றினர். கூட்டமாக … Read more

சீனாவில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா: ஒரே நாளில் 32,943 பேருக்கு பாதிப்பு

பீஜிங், சீனாவின் உகான் நகரில் 2019 டிசம்பரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று, உலக நாடுகளையெல்லாம் பாதித்தது. நேற்று முன்தின நிலவரப்படி உலகமெங்கும் 63 கோடியே 95 லட்சத்து 78 ஆயிரத்து 239 பேரை கொரோனா பாதித்துள்ளது. இந்தத் தொற்றால் 66 லட்சத்து 25 ஆயிரத்து 979 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் அதிகபட்சமாக 9 கோடியே 85 லட்சத்து 3 ஆயிரத்து 462 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அங்கு 10 லட்சத்து 78 ஆயிரத்து 929 … Read more

சவுதி அரேபியாவில் பெய்த கனமழைக்கு இருவர் உயிரிழப்பு

ரியாத், மேற்கு சவூதி அரேபியாவின் கடலோர நகரமான ஜித்தா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மழை காரணமாக இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும், மழையால் விமானங்கள் தாமதமானது. பள்ளிகளையும் மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவசியமின்றி வெளியே செல்ல வேண்டாம் என்று அரசாங்கம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. யாத்ரீகர்கள் மெக்காவை அடைவதற்குப் பயன்படுத்தும் சாலை, மழை தொடங்கியவுடன் மூடப்பட்டது. ஜெட்டாவில் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் குளிர்கால மழை மற்றும் … Read more

இந்தோனேஷிய நிலநடுக்கம்: பலி 310 ஆக உயர்வு; 24 பேர் மாயம்!

பூகோள அமைப்பு ரீதியாக ஜப்பானை போன்றே நிலநடுக்க அபாயம் அதிகம் உள்ள நாடான இந்தோனேஷியாவிலும், நிலநடுக்கத்தால் உயிர்சேதம் ஏற்படாத வகையில் வீடுகளும், நிலநடுக்கம் ஏற்படும்போது பொதுமக்கள் தங்களை எப்படி தற்காத்து கொள்ள வேண்டும் என்பது குறித்த பயிற்சியையும் இந்தோனேஷிய அரசு அளிக்க வேண்டும் என கோரிக்கைகள் தொடர்ந்து எழுந்து வந்தது. இந்தநிலையில், இந்தோனேஷியாவில் கடந்த திங்கள் கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 310 பலியாகி உள்ளதா அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் கடந்த நவம்பர் 21ம் … Read more

சீனா: அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து – 10 பேர் பலி

பீஜீங், சீனாவின் வடமேற்கில் உள்ள சின்ஜியாங் மாகாணத்தின் உரும்கி நகரில் 21 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் நேற்றிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் … Read more

140 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டறியப்பட்ட பறவை இனம்: விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

போர்ட் மோர்ஸ்பி: 140 ஆண்டுகளாக அழிந்துவிட்டது என கருதப்பட்ட பறவை இனம் ஒன்று பப்புவா நியூ கினியா தீவுகளில் மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது. உடலின் மையப் பகுதியில் ஆரஞ்சு நிறம் கொண்ட புறா இனம் (black-naped pheasant pigeon) ஒன்றினை 1882-ஆம் ஆண்டுக்குப் பிறகு காடுகளில் காண முடியவில்லை என விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், அந்த இனத்தின் பறவை ஒன்று 140 ஆண்டுகளுக்குப் பிறகு பப்புவா கினியா தீவில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது விஞ்ஞானிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தொலைந்த … Read more