பொருளாதார நெருக்கடி… இந்தியா விரைந்த இலங்கை அமைச்சர்!

அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இந்த நெருக்கடியில் இருந்து மீள உலக நாடுகளிடம் அந்நாடு பொருளாதார உதவி கோரி வருகிறது. இந்திய அரசும் இலங்கைக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. குறிப்பாக பெட்ரோலிய பொருட்களை கொள்முதல் செய்வதற்காக, இலங்கைக்கு கடனாக 3,730 கோடி ரூபாய் வழங்குவதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்த நிலையில், இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் பெரீஸ் மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா … Read more

சைகையை மீறி வேகமாக வந்த கார்.. சிறுமியை தள்ளிவிட்டு காரில் அடிபட்டு விழுந்த போக்குவரத்து பெண் காவலர்.. குவியும் பாராட்டு.. <!– சைகையை மீறி வேகமாக வந்த கார்.. சிறுமியை தள்ளிவிட்டு காரில… –>

அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் சைகையை மீறி வேகமாக வந்த கார், சாலையைக் கடந்து வந்த பள்ளிச்சிறுமி மீது மோத இருந்த நிலையில் அவளை தள்ளி விட்டு, காரில் அடிபட்டு விழுந்த போக்குவரத்து பெண் காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. கடந்த 4-ம் தேதியன்று நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. பெண் காவலர், cecil கவுண்டி பகுதியில் உள்ள சாலை ஒன்றில் பணியில் ஈடுபட்டிருந்த போது சாலையின் ஒரு புறத்தில் வந்த வாகனங்களை … Read more

ஜின்பிங்குடன் இம்ரான்கான் சந்திப்பு

பீஜிங் : சீனாவில் பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடங்கி உள்ளது. அதில் பங்கேற்பதற்காக சென்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், நேற்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார். அப்போது, சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட முதலீட்டு திட்டத்தில் நெருங்கிய ஒத்துழைப்பு அளிக்க ஜின்பிங் உறுதி அளித்தார். மாறிவரும் உலகத்தில் சீனா-பாகிஸ்தான் பாதுகாப்பு உறவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர் கூறினார். ஐ.நா. போன்ற பன்னாட்டு அமைப்புகளில் பாகிஸ்தானுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனா ஆர்வமாக இருப்பதாகவும் ஜின்பிங் தெரிவித்தார். … Read more

2 ஆண்டுகளுக்குப் பிறகு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்த ஆஸ்திரேலியா

கான்பரா: இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் சுற்றுலாப் பயணிகளுக்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. கரோனா பரவல் காரணமாக ஆஸ்திரேலியாவில் இரண்டு ஆண்டுகளாக சுற்றுலாப் பயணிகளை அந்நாட்டு அரசு அனுமதிக்கவில்லை. கரோனாவை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்தது. இதற்காக ராணுவத்தையும் அரசு பயன்படுத்தியது. இந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, இரண்டு டோஸ் கரோனா தடுப்பூசிகளை செலுத்திக்கொண்ட சுற்றுலாப் பயணிகள் வரும் பிப்ரவரி … Read more

பாகிஸ்தானுக்கு முன்னுரிமை: சீனா உறுதி!

இந்தியாவின் அண்டை நாடானா சீனாவுடனும், பாகிஸ்தானுடனும் எப்போது எல்லைப் பிரச்சினை நிலவி வருகிறது. சீனாவுடனான எல்லைப் பிரச்சினை தொடர்பாக பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை எந்த பலனும் இல்லை. இந்த நிலையில், சீனாவின் அண்டை நாடுகளில் பாகிஸ்தானுக்கு எப்போதும் முன்னுரிமை வழங்கப்படும் என அந்நாட்டு பிரதமர் லி கெக்கியாங் உறுதி தெரிவித்துள்ளார். சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. இதன் துவக்க விழாவில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கலந்து கொண்டார். இதனிடையே, சீனப் … Read more

இளவரசர் சார்லஸ் மனைவி கமிலாவுக்கு ராணி பட்டம் இங்கிலாந்து ராணி விருப்பம்

லண்டன் : இங்கிலாந்து நாட்டில் ராணியாக இருப்பவர், 2-ம் எலிசபெத் மகாராணி (வயது 95). இங்கிலாந்து மன்னராக இருந்த ஆறாம் ஜார்ஜின் மகள் இவர். மன்னர் ஆறாம் ஜார்ஜ், 1952-ம் ஆண்டு பிப்ரவரி 6-ந் தேதி மறைந்த பின்னர், 2-ம் எலிசபெத் ராணி பட்டத்துக்கு வந்தார். அப்போது அவருக்கு வயது 25. தற்போது அவர் ராணி பட்டத்துக்கு வந்து 70 ஆண்டுகள் ஆகின்றன. இதையொட்டி இங்கிலாந்து முழுவதும் வரும் ஜூன் மாதம் பிரமாண்ட கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. … Read more

கனடாவில் ஹிந்து கோவில்கள் சூறை| Dinamalar

டொரோன்டா-கனடாவில், ஹிந்து கோவில்கள் தொடர்ந்து சூறையாடப்பட்டு வருவதால் நாடு முழுதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. வட அமெரிக்க நாடான கனடாவின் பிராம்ப்டன் பகுதியில் கடந்த மாதம் ஆஞ்சநேயர் கோவிலை சில மர்ம நபர்கள் சூறையாடினர். அந்த சம்பவத்தை தொடர்ந்து அம்மன் கோவில், சிவன் கோவில், ஜெகன்நாதர் கோவில் என அடுத்தடுத்து பல கோவில்கள் சூறையாடப்பட்டன.கடந்த 30ம் தேதி மிசிசவுகா பகுதியில் உள்ள ஒரு ஹிந்து கலாசார மையத்திற்குள் நள்ளிரவில் இரண்டு மர்ம நபர்கள் அத்துமீறி நுழைந்தனர். … Read more

பிப். 21 முதல் மீண்டும் முழு ஊரடங்கு? – பிரதமர் திடீர் விளக்கம்!

வரும் பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி முதல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கும் வகையில் ஆஸ்திரேலியா எல்லைகள் முழுமையாக திறக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார். சர்வதேச அளவில் அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு நாடுகளில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதே போல், ஆஸ்திரேலியாவிலும் கொரோனா தொற்று அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் எல்லைகள் முழுமையாக மூடப்பட்டன. பிறகு, … Read more

கரிம உமிழ்வு குறித்து தவறாக விளம்பரப்படுத்தியதாக மெர்சிடெஸ் பென்ஸ் நிறுவனத்துக்கு ரூ.126 கோடி அபராதம் <!– கரிம உமிழ்வு குறித்து தவறாக விளம்பரப்படுத்தியதாக மெர்சிடெ… –>

மெர்சிடெஸ் பென்ஸ் நிறுவன கார்களின் கரிம உமிழ்வு குறித்து தவறாக விளம்பரப்படுத்தியதற்காக அந்நிறுவனத்துக்கு தென் கொரிய அரசு 126 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. ஜெர்மன் நாட்டு சொகுசு கார் நிறுவனமான மெர்சிடெஸ் பென்ஸ், தென் கொரியாவில் உள்ள அதன் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ள 15 டீசல் கார் மாடல்களின் கரிம உமிழ்வை குறைத்து கணக்கிடும் வகையில் அந்த வாகனங்களில் மென்பொருள் நிறுவப்பட்டுள்ளதாக அந்நாட்டு வர்த்தக ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் ஐரோப்பியத் தரநிலைகளுக்கு ஏற்ப கரிம உமிழ்வுகள் … Read more

ஆஸ்திரேலியா எல்லைகள் முழுமையாக திறக்கும் தேதியை அறிவித்தார் பிரதமர் ஸ்காட் மோரிசன்

சர்வதேச அளவில் அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு நாடுகளில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதேபோல், ஆஸ்திரேலியாவிலும் கொரோனா தொற்று அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் எல்லைகள் முழுமையாக மூடப்பட்டன. பிறகு, ஆஸ்திரேலியா குடிமக்கள், புலம்பெயர்ந்தவர்கள், சர்வதேச மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மட்டும் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டன. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கும் வகையில் நாட்டின் எல்லைகள் மீண்டும் திறக்கப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை … Read more