`தலைவர் பதவியிலிருந்து ஆர்.கே.செல்வமணி உடனே விலக வேண்டும்!' – சூட்டைக் கிளப்பும் பெப்சி பஞ்சாயத்து
‘பெப்சி’ எனப்படும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவராக இருக்கும் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி உடனடியாக அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டுமென போர்க்கொடி தூக்கியுள்ளனர், பெப்சியில் அங்கம் வகிக்கும் சில சினிமா அமைப்புகளின் நிர்வாகிகள். இது தொடர்பாக பெப்சியில் அங்கம் வகிக்கும் 23 கிராஃப்ட்களில் ஒன்றான தென்னிந்திய சினிமா மற்றும் சின்னத்திரை அவுட்டோர் யூனிட் டெக்னீஷியன் யூனியனின் பொதுச் செயலாளர் தனபால் நம்மிடம் பேசினார். ”பெப்சிங்கிறது 23 சினிமா கிராஃப்ட்களை உள்ளடங்கிய சினிமா அமைப்பு. நான் அந்த அமைப்பில் பல வருடங்களாக இணைச் செயலாளர் பொறுப்புல இருந்திருக்கேன். விஜயன் முதல் … Read more