வேட்பாளரின் தந்தை மீது துப்பாக்கிச் சூடு… தேர்தல் பிரசாரத்தில் பரபரப்பு!

மணிப்பூர் மாநில சட்டப்பேரவைக்கு வரும் 27 ஆம் தேதி மற்றும் அடுத்த மாதம் 5 ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து அங்கு பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

ஆண்ட்ரோ தொகுதியில், ஆளும் தேசிய மக்கள் கட்சி சார்பில் சஞ்சோய்சிட் என்பவர் களம் காண்கிறார். இவருக்கு ஆதரவாக அவரது தந்தை சம்ஜய்சிங் நேற்றிரவு பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார் அப்போது அங்கு வந்த மர்ம நபர் அவர் மீது திடீரென துப்பாக்கிசூடு நடத்தினார். இதில் அவரது தோள்பட்டையில் குண்டு பாய்ந்தது.

உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தேசிய மக்கள் கட்சியின் தலைவரும் மேகாலயா முதல்வருமான கான்ராட் கேசங்மா மருத்துவமனைக்கு சென்று துப்பாக்கி சூட்டில் காயமடைந்த சம்ஜய்சிங்கிற்கு ஆறுதல் கூறினார். இந்த சம்பவத்திற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சஞ்சோய்சிட் அண்மையில்தான் பாஜகவில் இருந்து விலகி தேசிய மக்கள் கட்சியில் இணைந்தார். இதனால் முன்விரோதம் காரணமாக இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்திருக்குமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.