சாலை விபத்து: வேலைக்குச் சென்ற அரசு பேருந்து நடத்துனர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்

செங்கல்பட்டு அருகே; இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் அரசு பேருந்து நடத்துநர்கள் இருவர் உயிரிழப்பு.
செங்கல்பட்டு ஜோதி பிரகாஷ் (45) என்பவரும், மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த நந்தகோபன் (55) என்பவரும் சென்னை மத்திய மாநகர பேருந்து பணிமனையில் நடத்துநர்களாக பணியாற்றி வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வீட்டிற்குச் சென்று வரும் இவர்கள், செங்கல்பட்டு அரசு பணிமனையில் இருசக்கர வாகனத்தை நிறுத்த சென்று கொண்டிருந்தனர்.
image
அப்போது செங்கல்பட்டில் இருந்து கல்பாக்கம் செல்லும் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது, இவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் பின்னால் வந்த டாரஸ் லாரி மோதியதில் இருவரும் கீழே விழுந்தனர். இதில் ஜோதி பிரகாஷ் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயரிழந்தார்.
image
இதைத் தொடர்ந்து நந்தகோபலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார். இதனையடுத்து 2பேர் உடலையும் கைப்பற்றிய செங்கல்பட்டு நகர போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர், லாரியை கைப்பற்றி லாரி ஓட்டுனர் சக்திவேலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.