போலீஸை அடிக்க பாய்ந்த போதை ஆசாமியை அடித்து வீழ்த்திய ஓட்டுனர் – நடத்துனர்..!

நாகர் கோவில் பேருந்து நிலையத்தில் போதையில் ரகளை செய்த ஆசாமி ஒருவர், சத்தம்போட்ட போலீஸ் காரரை அடிக்க பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அடங்கா காளையாக விரைப்பு காட்டிய போதையனை மடக்கிப்பிடித்து அடித்து வீழ்த்திய சம்பவத்தின் வீடியோ வெளியாகி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் காலை மாலை நேரங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும் இதனால் அங்கு காவல்துறை அதிகாரிகளும் போலீசாரும் ரோந்து செல்வது வழக்கம் அவ்வாறு அங்கு காவல்துறை அதிகாரி ஒருவர் ரோந்து சென்றபோது குடிபோதையில் காணப்பட்ட ஒருவர் ரகளையில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்.

அவரை எச்சரிக்கை சேர்ந்த ரோந்து போலீஸ்காரரிடம் போதை ஆசாமி மல்லுக்கு நின்றான். கையை ஓங்கி அவரை அடிக்க பாய்வது போல பூச்சாண்டிக் காட்டிக் கொண்டு இருந்தான்.

பள்ளி மாணவர்கள் வேடிக்கை பார்த்ததால் அவனது கனத்தை கைவைக்காமல் அமைதி காத்த போலீஸ்காரர், தன்னிடம் வம்பிழுத்த குடிகார குப்பனை அப்படியே விட்டு விட்டு தனது உயர் அதிகாரியான உதவி ஆய்வாளரை அழைத்துவரச்சென்றார்.

இதனை பார்த்து ஆத்திரம் அடைந்து அங்கு வந்த போக்குவரத்து ஊழியர்கள் போதை ஆசாமியை சுற்றி வளைத்து நையப் புடைத்தனர். இந்த திடீர் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத போதை ஆசாமி பொத்தென கீழே விழுந்து தூக்குவது போல படுத்துக் கொண்டான்.

பின்னர் போலீசார் அவனது போதையை தெளியவந்த்து விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச்சென்றனர். பேருந்து பயணி ஒருவரால் எடுக்கப்பட்ட இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.