ஒட்டெடுப்பில் இருந்து விலகி இருங்கள்: எம்.பி.க்களுக்கு இம்ரான் உத்தரவு| Dinamalar

இஸ்லாமாபாத்: நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான ஒட்டெடுப்பிலிருந்து விலகி இருங்கள் என தனது கட்சி எம்.பி.க்களுக்கு உத்தரவிட்டுள்ளார் பாக். பிரதமர் இம்ரான்கான்.

நம் அண்டை நாடான முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், பாகிஸ்தான் தெஹ்ரிக் – இ – இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம், பார்லிமென்டில் மார்ச் 28-ல் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீது, ஓட்டெடுப்பு ஏப். 3-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

மொத்தமுள்ள 342 எம்.பி.,க்களில், 172 பேர் ஆதரவு இருந்தாலே தீர்மானம் நிறைவேறிவிடும்.
அதைத் தொடர்ந்து, பதவியில் இருந்து இம்ரான் கான் விலக நேரிடும்.ஏற்கனவே இம்ரான் கானுக்கு எதிராக கூட்டணி கட்சிகள் மற்றும் சொந்தக் கட்சி எம்.பி.,க்கள் போர்க் கொடி தூக்கியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று தனது கட்சி எம்.பி.க்களுக்கு பிரதமர் இம்ரான் கடிதம் எழுதியுள்ளார். அதில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது ஏப். 3-ல் நடக்கவுள்ள ஓட்டெடுப்பில் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி உறுப்பினர்கள் வாக்களிப்பதில் இருந்து விலகி இருக்க வேண்டும். இதனை அனைத்து எம்.பி.க்களும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் இம்ரான் குறிப்பிட்டுள்ளார்.

,

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.