கடந்த சனிக்கிழமை (2) அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் ,தளர்த்தப்பட்டதையடுத்து ரயில்கள், இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள்கள் மற்றும் தனியார் பஸ்கள் உட்பட அனைத்து போக்குவரத்து சேவைகளும் இன்று காலை 6.00 மணி முதல் தமது சேவைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளன.
அனைத்து அலுவலக ரயில்களும் வழமை போன்று சேவையில் ஈடுபட்டன .எனினும் நீண்ட தூர இடங்களுக்கான ரயில்கள் ஒரு மணித்தியாலம் தாமதமாக செயற்பட்டதாகவும் ரயில்வே பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.
அனைத்து பஸ் நிலையங்களுக்கும் உட்பட்ட பஸ்கள் திட்டமிட்ட நேர அட்டவணையின்படி மீண்டும் சேவைகளில் ஈடுபட்டதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் தெரிவித்தார்.
இதேவேளை, தற்போது 15 வீதமான பேருந்துகள் இன்று முதல் செயற்பட தொடங்கியுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.