800 செவிலியர்கள் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்ற முன்னுரிமை -மா.சுப்பிரமணியன்

பெருந்தொற்று காலத்தில் பணியமர்த்தப்பட்ட 800 செவிலியர்களை மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்ற முன்னுரிமை அளிக்கப்படுமென மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கொரோனா காலத்தில் 2020 ஆம் ஆண்டு 3,200 செவிலியர் பணியமர்த்தப்பட்டனர். இவர்களில் 2,400 பேர் நிரந்தர ஒப்பந்த செவிலியராக பணியமர்த்தப்படுவதாகவும், மீதமுள்ளவர்கள் எதிர்காலத்தில் காலியிடங்களுக்கேற்ப பணியமர்த்தப்படுவார்கள் என்றும் பேச்சுவார்த்தையின்போது மருத்துவத்துறை அமைச்சர் மற்றும் செயலாளர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தற்போது நிதிப் பற்றாக்குறை காரணமாக 800 செவிலியர் மார்ச் 31 ஆம் தேதியுடன் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதைக் கண்டித்து, சென்னை – டி.எம்.எஸ். வளாகத்தில் போராட்டம் நடத்த முற்பட்ட செவிலியர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், 800 செவிலியரும் படிப்படியாக பணியமர்த்தப்படுவார்கள் என்று கூறினார்.

இதையும் படிக்க: ‘கசப்பு மருந்துபோல், சொத்து வரியை பார்க்க வேண்டும்’ – அமைச்சர் சேகர்பாபு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.