சிங்கிள் காலில் 50 ஆயிரம் ரூபாயை சம்பாதித்த சாக்லெட்பாய்…!எப்படி தெரியுமா…?

நடிகர்
மாதவன்
தென்னிந்தியாவில் மட்டுமல்லாமல் பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக உள்ளவர்

சினிமாவில்
அலைபாயுதே
மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் இப்போது வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.இந்நிலையில் நடிக்க ஆரம்பித்த காலத்தில் ஒரே போன் காலில் 50 ஆயிரம் ரூபாய் கிடைத்தது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் மாதவன் பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவின் ஆல் டைம் சாக்லேட் பாயாக வலம் வந்து கொண்டுள்ளவர் நடிகர் மாதவன். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அலைபாயுதே படத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மாதவன் அதற்கு முன்பாகவே ஹிந்தியில் சில சீரியல்களில் நடித்து வந்தார். முதல் படம் அலைபாயுதே மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் தொடர்ந்து தமிழில் இவருக்கு படவாய்ப்புகளும் வந்தது.

தீயாய் வேலை செய்யும் லோகேஷ் கனகராஜ்… தளபதி 67 படத்தின் அடுத்த அப்டேட்..!

முதல் படத்திலேயே பெண் ரசிகைகள் இவருக்கு எக்கச்சக்கமாக உருவானது அன்று முதல் இன்று வரை அந்த ரசிகைகள் பட்டாளம் பின்தொடர்ந்து கொண்டே உள்ளது.
சாக்லேட் பாய்
கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாதவன்
இறுதிச்சுற்று
படத்தில் மிக வித்தியாசமான வேடத்தில் நடித்திருப்பார். சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதிச்சுற்று படத்தில் மாதவன் முரட்டுத்தனமான பாக்ஸிங் கோச்ராக நடித்திருப்பார். நீண்ட தலைமுடி பல்கான உடல் என மாதவன் வித்தியாசம் காட்டி நடித்தது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.

இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்

இப்பொழுது
ராக்கெட்டரி- தி நம்பி எபெக்ட்
என்ற சயின்டிஃபிக் படத்தை மாதவன் இயக்கி நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை சிம்ரன் மாதவனுக்கு ஜோடியாக நடித்து உள்ளார். இதன் நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மாதவன் ஒரே போன் காலில் 50 ஆயிரம் ரூபாய் கிடைத்த சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார்.

அதாவது நடிக்க தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் மும்பையில் ஒரு சிறிய அறையில் தங்கிக் கொண்டு இருந்துள்ளார்.அப்போது சொந்தமாக
டெலிபோன்
எதுவும் கிடையாது. எனவே பக்கத்து வீட்டில் உள்ள டெலிபோன் நம்பரை தான் நடிக்க செல்லுமிடங்களில் கொடுத்து வந்துள்ளார். ஷூட்டிங்குக்கு அழைப்பதற்காக நடு இரவிலும் கால் செய்வதால் பக்கத்து வீட்டுக்காரர் சிரமமாக நினைப்பாரோ என்று நினைத்து அப்போதே 30 ஆயிரம் ரூபாய் செலவு செய்து ஒரு செல்போனை வாங்கியுள்ளார்.

செல்போனை வாங்கிய உடனேயே அந்த போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது அதில் பேசியவர் இன்று ஷூட்டிங்கிற்கு வரவேண்டிய மாடல் வரவில்லை எனவே நீங்க வந்து நடித்து கொடுங்கள் அந்த மாடலுக்கு பேசிய 50 ஆயிரம் ரூபாய் சம்பளத்தை உங்களுக்கு தந்து விடுகிறோம் என கூறியுள்ளனர். இவ்வாறு ஒரே போன் காலில் 50 ஆயிரம் ரூபாய் தனக்கு கிடைத்த சுவாரஸ்ய அனுபவத்தை மாதவன் நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

Sila Nerangalil Sila Manithargal – மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.