நியூயார்க்:அமெரிக்காவில், ஓடுபாதையில் தரையிறங்கிய, ‘யுனைடெட் ஏர்லைன்ஸ்’ விமானத்தின் அவசரகால கதவு வழியாக வெளியேறி, இறக்கை மீது சறுக்கிச் சென்று குதித்த பயணி கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில், சான்டியாகோ நகரில் இருந்து, யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணியர் விமானம் ஒன்று, நேற்று முன்தினம் அதிகாலை, 4:30 மணிக்கு, சிகாகோவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் தரையிறங்கியது.அந்த விமானம், நிறுத்தும் இடத்தை நோக்கி மெதுவாக சென்றபோது, ராண்டி பிரான்க் டேவிலா, 57, என்ற அமெரிக்கர், அவசரகால கதவை திறந்து அதன் வழியாக வெளியேறி, விமானத்தின் இறக்கையில் சறுக்கிச் சென்று, அங்கிருந்து கீழே குதித்துள்ளார்.
இதனால், அங்கே சிறிது நேரம் பதற்றம் நிலவியது. இதையடுத்து, போலீசார் டேவிலாவை கைது செய்து அழைத்துச் சென்றனர். தவறான நடத்தையால் கைது செய்யப்பட்டுள்ள அவரை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நியூயார்க்:அமெரிக்காவில், ஓடுபாதையில் தரையிறங்கிய, ‘யுனைடெட் ஏர்லைன்ஸ்’ விமானத்தின் அவசரகால கதவு வழியாக வெளியேறி, இறக்கை மீது சறுக்கிச் சென்று குதித்த பயணி கைது
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.