வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்

திருத்தணி: திருத்தணி எம்.எல்.ஏ, அலுவலகத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. சந்திரன், பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தினர்.                         திருத்தணி நகராட்சி, ம.பொ.சி.சாலையில் எம்.எல்.ஏ. அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்திற்கு நேற்று தி.மு.க. எம்.எல்.ஏ சந்திரன் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் தொகுதியின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

மேலும், பழுதடைந்துள்ள அரசு கட்டடங்கள் குறித்தும் எம்.எல்.ஏ. சந்திரன் கேட்டறிந்தார்.  இனிவரும் நாட்களில் அனைத்து நாட்களும் அலுவலகம் திறந்திருக்கும்,   வாரத்திற்கு ஒரு முறை அலுவலகத்திற்கு வந்து மக்கள் குறைகள் கேட்க உள்ளேன் என எம்.எல்.ஏ சந்திரன் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.