அதிமுக அலுவலக சாவி தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை!

அதிமுக அலுவலக சாவி தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மூன்று வார இடைவெளிக்குப் பின் இன்று விசாரணைக்கு வருகிறது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த ஜூலை 11-ந்தேதி கலவரம் நடந்ததை அடுத்து, அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், சீல் அகற்றப்பட்டு எடப்பாடி பழனிசாமி வசம் அலுவலக சாவி ஒப்படைக்கப்பட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்த வழக்கில், ஓபிஎஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினராகக்கூட இல்லாத போது, அதிமுக அலுவலகத்தின் அதிகார உரிமையை கோர முடியாது என்று இபிஎஸ் தரப்பில் நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.