இந்த 2க்கு இனி குறையே இருக்காது; அமைச்சர் ஹேப்பி தகவல்!

கோயம்புத்தூர் ஈச்சனாரி பகுதியில் அமைந்துள்ள ரத்தினம் கல்லூரி வளாகத்தில், ரத்தினம் கல்வி நிறுவனங்களின் 50வது ஆண்டு பொன்விழா நிகழ்ச்சி இன்று கோலாகலமாக நடந்தது.

இந்த விழாவில் தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்டத்தில் இருந்து உருவான 10 பிரபலங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

இதை தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்கள் மத்தியில் பேசியதாவது:

தமிழக பள்ளி கல்வி துறையில் சமச்சீர் கல்வி துவங்கி உயர் கல்வி வரையிலும் வளர்ச்சிக்கான பல்வேறு முன்னெடுப்புகளை தற்போதைய தமிழக அரசு செய்து வருகிறது.

தற்போதைய இளைஞர்கள் சமுதாயத்தின் வளர்ச்சிக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் பயன்படும் வகையிலேயே உருவாகி வருகின்றனர். இளைஞர்களின் படிப்பிற்கு ஏற்றவாறு வேலை வாய்ப்பு உருவாக்கி தருவது தான் திராவிட மாடலின் சித்தாந்தம்.

தமிழ்நாட்டில் உங்களுக்கான முதல்வராக தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளார். அரசு பள்ளிகள் என்பது வறுமையின் அடையாளம் இல்லை. பெருமை அடையாளமாய் திகழ்ந்து வருகிறது.

அரசு பள்ளி பாடத்திட்டத்தை ஒத்தே சிபிஎஸ்சி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் பாடத்திட்டம் உள்ளது. கல்வி, மருத்துவம் என இரண்டிலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

மற்ற நாடுகள் நம்மை பார்த்து பயப்படுகின்றன. நம்மிடம் உள்ள ஆயுதத்தை பார்த்து இல்லை. மாறாக நம்மிடம் இருக்கும் இளைய சமுதாயத்தை பார்த்து தான் பயப்படுகின்றன. பிற்போக்குவாதிகளை விடவும் நாம் வேகமாக இருக்க வேண்டும். இவ்வாறு, பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.