தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 29 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 29 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல்லில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளனர். கடலூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, நாமக்கல், கரூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய  மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.