விழுப்புரத்தில் பத்தாம் வகுப்பு மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் புவன்சங்கர் (15) விழுப்புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை டியூஷனுக்கு சென்ற புவன்சங்கர் வீட்டிற்கு வந்தபோது, முருகேசன் பள்ளிக்கு செல்லுமாறு கூறிவிட்டு அவர் வேலைக்கு சென்றுள்ளார்.
இதையடுத்து மதியம் 2 மணியளவில் முருகேசன் வீட்டிற்கு வந்த போது கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்துள்ளது. இதனால் முருகேசன் கதவை உடைத்து உள்ளே சென்றபோது புவன்சங்கர் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார்.
இதைப்பார்த்த முருகேசன் அதிர்ச்சடைந்தார். இதை எடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த விழுப்புரம் நகர போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மாணவன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.