இதய நோயால் மயக்கம் அடைந்த தாய்லாந்து இளவரசிக்கு 3 வாரமாக சுயநினைவு திரும்பவில்லை.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

இதய நோய் காரணமாக மூன்று வாரங்களுக்கு முன்பு மயக்கம் அடைந்து விழுந்த தாய்லாந்து இளவரசி பாஜ்ராகத்தி யாபாவுக்கு இன்னும் சுயநினைவு திரும்பவில்லை.

44 வயதான  இளவரசி, தாய்லாந்து மன்னருக்கு பிறகு, அவரது இடத்தில் அமர போகும் வாரிசாக கருதப்படுகிறார். கடந்த 15ம் தேதி தனது வளர்ப்பு நாய்களை போட்டிக்கு தயார்படுத்தி கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்த அவர், பாங்காக்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆனால் அவருக்கு இன்னும் சுயநினைவுக்கு  திரும்பவில்லை என்று அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.