ஆட்குறைப்பில் ஈடுபடும் மைக்ரோசாப்ட் நிறுவனம்: 11 ஆயிரம் பணியாளர்களை நீக்க முடிவு| Microsoft Set To Lay Off Thousands From Today: Report

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வாஷிங்டன்: பிரபல சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட், பொருளாதார நெருக்கடி காரணமாக இன்று (ஜன.,18) சுமார் 11 ஆயிரம் பணியாளர்களை நீக்க முடிவு செய்துள்ளது.

பல்வேறு பெருநிறுவனங்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனமும் இணைந்துள்ளது.

மைக்ராசாப்ட் சுமார் 11 ஆயிரம் பணியாளர்களை வேலையில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது. கடந்த ஜூன் மாத நிலவரங்கள்படி, அந்நிறுவனத்தில் அமெரிக்காவில் 1.22 லட்சம் பணியாளர்கள், மற்ற நாடுகளில் 99 ஆயிரம் பணியாளர்கள் என 2.21 லட்சம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

latest tamil news

இந்த நிலையில் மொத்த பணியாளர்களில் 5 சதவீதம் அதாவது 11 ஆயிரம் பேரை இன்றே பணியில் இருந்து நீக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மனித வளம் மற்றும் பொறியாளர் பிரிவுகளில் தான் தற்போது ஆட்குறைப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இதுவரை மைக்ரோசாப்ட் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. மைக்ரோசாப்டில் கணினி விற்பனை, விண்டோஸ் உள்ளிட்ட சாப்ட்வேர் விற்பனை கடந்த சில ஆண்டுகளாகவே சரிவை சந்தித்து வருகின்றன. இதன் காரணமாகவே ஆட்குறைப்பு செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஆன்லைன் வணிக நிறுவனமான அமேசானும் 18 ஆயிரம் பணியாளர்களை நீக்க உள்ளதாக இம்மாத துவக்கத்தில் தெரிவித்திருந்தது. பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, கடந்த நவம்பரில் 11 ஆயிரம் பணியாளர்களையும், ஆகஸ்டில் ஸ்னாப்சாட் நிறுவனம் 20 சதவீத பணியாளர்களையும், முன்னணி சமூகவலைதள நிறுவனமான டுவிட்டர் கடந்த அக்டோபரில் 7,500 பணியாளர்களையும் நீக்கியிருந்தது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.