சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலையில் போலீசார் சோதனை நடத்தினர். இரவு நேரங்களில் வழிப்பறி, செயின் பறிப்பு, பைக் திருட்டு, கஞ்சா குறித்து புகார்கள் வருவதால் போலீசார் இன்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வியாபாரிகள் கூலி தொழிலாளர்களாக இல்லாதவர்கள் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து வெளியேற்றம் செய்ய படுகின்றனர்.