ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 'சோலோ'வாக களமிறங்கும் தேமுதிக!

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட உள்ளதாக அக்கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து உள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா, உடல்நலக் குறைவால் அண்மையில் உயிரிழந்தார். இதை அடுத்து ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை மார்ச் மாதம் 2 ஆம் தேதி நடைபெறும் என்றும் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் 31 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி சார்பில், காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ளது. இதில், மறைந்த திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ். இளங்கோவன் களமிறங்க உள்ளார். மகன் சஞ்சய்க்கு ஈவிகேஎஸ்.இளங்கோவன் சீட் கேட்ட நிலையில், காங்கிரஸ் மேலிடம், அவருக்கே வாய்ப்பு வழங்கி உள்ளது. இதே போல், அதிமுகவும் ஈரோடு கிக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளது. அக்கட்சிக்கு ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்து உள்ளது.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட உள்ளதாக அக்கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து உள்ளார். இடைத்தேர்தல் தொடர்பாக தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணைச் செயலாளர் சுதீஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து உள்ளார். அத்துடன் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆனந்த் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.