Thunivu:துணிவு படம் பார்க்க அழைத்துச் செல்லாத பெற்றோர்: +2 மாணவி தற்கொலை

அஜித்தின் துணிவு படம் பார்க்க சென்ற குடும்பத்தார் தன்னையும் அழைத்துச் செல்லாததால் 12ம் வகுப்பு மாணவி சிவமகா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

துணிவுஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த துணிவு படம் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக ஜனவரி 11ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. இந்நிலையில் துணிவு படம் தொடர்பாக ஒரு உயிர் போனது குறித்து அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கும்பகோணம் அருகே இருக்கும் முத்துப்பிள்ளை மண்டபம் சாலையில் தன் இரண்டு மகள்கள், மனைவியுடன் வசித்து வருகிறார் சுரேஷ்.

தியேட்டர்ஜனவரி 22ம் தேதி மனைவி, மூத்த மகளுடன் துணிவு படம் பார்க்க தியேட்டருக்கு கிளம்பினார் சுரேஷ். இளைய மகள் சிவமகா 12ம் வகுப்பு படித்து வந்தார். தேர்வு நேரம் என்பதால் நீ தியேட்டருக்கு வர வேண்டாம், படிமா என்று சொல்லி அவரை வீட்டிலேயே விட்டுவிட்டுச் சென்றார்கள். படம் முடிந்து வீடு திரும்பியவர்கள் கதவை பலமுறை தட்டியும் சிவமகா திறக்கவில்லை.

தற்கொலைகதவை உடைத்து உள்ளே சென்றபோது தான் சிவமகா தூக்கில் தொங்கியது தெரிய வந்தது. இதையடுத்து அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார்கள். ஆனால் சிவமகாவை பரிசோதனை செய்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதை கேட்டு சுரேஷும், மனைவியும் மனமுடைந்துவிட்டார்கள்.

படம்சிவமகாவின் மரணம் குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். துணிவு படத்திற்கு தன்னை அழைத்துச் செல்லாத வருத்தத்தில் தான் சிவமகா இப்படி ஒரு முடிவு எடுத்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சோகம்துணிவு படம் பார்க்க பெற்றோர் தன்னை அழைத்துச் செல்லாத கவலையில் 12ம் வகுப்பு மாணவி எடுத்த முடிவு அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று இல்லை என்றால் இன்னொரு நாள் அந்த துணிவு படத்தை பார்த்திருக்கலாமே. அதற்கு போய் சிவமகா அவரப்பட்டுவிட்டாரே. உன்னை இழந்த பெற்றோர், நீ இல்லை என்பதை ஏற்கவே பல காலம் ஆகுமே என சமூக வலைதளவாசிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னைமுன்னதாக துணிவு படம் ரிலீஸான அன்று சென்னையில் இருக்கும் தியேட்டர் ஒன்றில் நடந்த கொண்டாட்டத்தின்போது லாரியில் இருந்து கீழே விழுந்த அஜித் ரசிகர் ஒருவர் மரணம் அடைந்தார். இந்நிலையில் படம் பார்க்க போக முடியாத கவலையில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.