இரட்டை இலை உரிமை இவருக்கு தான்: தேர்தல் ஆணையத்தில் ஆவணங்கள் சமர்பிப்பு!

அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் படிவங்கள் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இரட்டை இலைக்கு ஒப்புதல் வழங்கும் ஏ, பி படிவங்களில் கையெழுத்திடும் உரிமை தமிழ்மகன் உசேனுக்கு வழங்கப்பட்டது. அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு இரட்டை இலை சின்னம் வழங்க ஒப்புதல் அளித்து தமிழ்மகன் உசேன் கையெழுத்திட்டார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் ஓ.பன்னீர் செல்வம் சார்பாக நிறுத்தப்பட்ட செந்தில் முருகன் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டார். தற்போது அதிமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளராக தென்னரசு வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.