சென்னை: வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டுகிறார் – முதல்நிலை காவலர் மீது பெண் புகார்

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி வருவதாக காவலர் மீது ஆவடி காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பெண் புகார் அளித்துள்ளார்.
சென்னை மணலி பகுதியைச் சேர்ந்த பெண் (38) ஒருவர் தனது கணவனை பிரிந்த நிலையில், பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், இவருக்கும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணி புரிந்து வரும் செல்லத்துரை என்பவருக்கும் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
image
இதையடுத்து காவலர் செல்லத்துரை தானும் மனைவியை பிரிந்தவர் எனக் கூறி பழகி வந்துள்ளார். இந்த நிலையில் அந்த பெண்ணிடம் திருமணம் செய்வதாக நம்ப வைத்து அவருடன் தனிமையில் இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து தன்னை திருமணம் செய்துகொள்ளும் படி அப்பெண் வற்புறுத்தி வந்துள்ளார். இதனை தட்டி கழித்து வந்த காவலர் செல்லத்துரை பிரச்னை செய்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அப்பெண் அவரை பற்றி விசாரித்தபோது அவருக்கு ஏற்கனவே திருமணமாகி சில பெண்களுடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது.
இதுபற்றி அவரிடம் கேட்டபோது அவதூறாக பேசி தாக்குதல் நடத்தியுள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்த பெண் சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து காவலர் செல்லத்துரை சஸ்பெண்ட் செய்பட்டுள்ளார். இதையடுத்து இருவரும் சேர்ந்து இருந்ததை வீடியோவாக எடுத்து வைத்துள்ள செல்லத்துரை அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி பணம் பறித்துள்ளார்.
image
இதையடுத்து கொலை மிரட்டல் விடுத்துவரும் செல்லத்துரை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவடி காவல் ஆணையரகத்தில் அந்த பெண் இன்று புகார் அளித்துள்ளார். புகாரில் தன்னுடன் பழகிய காலத்தில் அவருக்கு பல லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனவே அந்த காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். மேலும் செல்லதுரை காவலர் என்பதால் காவல்துறை அவர்மீது நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் வேதனை தெரிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.