நாகாலாந்து சட்டசபை தேர்தல்: பா.ஜ.க. வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிப்பு

கோஹிமா,

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் வரும் 16-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதே போல் நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களின் சட்டசபைக்கும், தமிழகத்தில் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் பிப்ரவரி 27-ந்தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பா.ஜ.க., காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. நாகாலந்தில் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நிறைவு பெற்ற நிலையில், மனுக்களை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் 10-ந்தேதி(நேற்று) முடிவடைந்தது.

இந்நிலையில் நாலாந்தில் உள்ள அகுலுட்டோ சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்திருந்த கெகாஷே சுமி, தனது மனுவை வாபஸ் பெற்றார். இதன் மூலம் அந்த தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த கசெட்டோ கிமினி போட்டியின்றி வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலர் சஷாங்க் சேகர் அறிவித்துள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் அகுலுட்டோ சட்டமன்ற தொகுதியின் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான கசெட்டோ கிமினி, தனது பதவியை தக்கவைத்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.